பழங்குடியின மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக...
வாச்சாத்தி கிராமம் பாதிக்கப்பட்ட போது முதலில் சென்று பார்வையிட்டு அந்த கிராம மக்களுக்கு நம்பிக்கை அளித்து தமிழ்நாடு மலைவாழ் மக் கள் சங்கமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தான். சிறையில் இருந்தவர்களை சந்தித்து அம்மக்களுக்கு ஆறுதலும் நம்பிக் கையும் அளித்தது. வன்முறை சமபவத்தால் கிராமம் சூறையாடப் பட்டு, பொருட்கள் சேதப்படுத்தபபடடு நிற்கதியாக நிண்ட போது, தேவையான துணி, வீட்டு உபயோக பொருட்கள், உணவு பொருட்களை மாநிலம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திரட்டி அம்மக்களுக்கு வழங்கியது. வாச்சாத்தி மக்களுக்கு நீதி கேட்டு தோழர் பி.சண்முகம் தலைமையில் தொடர் போராட் டங்கள் நடைபெற்றன. வனத்துறையும், காவல்துறையும் போராட்டத்தை சீர்குலைத்தது. மேலும், அன்றைய அதிமுக ஆட்சியாளர்கள் குற்றவாளிகளை பாதுகாக்க துணை நின்றனர். தொடர் போராட்டத்தின் விளைவாக இந்த வழக்கு மத்திய புலனாய்வு துறைக்கு மாற்றம் செய்யப்பட்டது. குற்றவாளிகளை பாதுகாக்க வனத்துறையினர் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்களை மிரட்டி வந்தனர். ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், மலைவாழ் மக்கள் சங்கமும் கிராமத்திலேயே தங்கி அம்மக்களுக்கு பாதுகாப்பு அரணாக இருந்தோம். பாலியல் குற்றவாளிகளை அடையாள அணிவகுப்பில் அடையாளம் கான பாதிக்கப்பட்ட பெண்களை அழைத்து சென்றபோது ஏரியா ரவுடிகும்பலை வைத்து வனத்துறை மிரட்டி னர். அதையும் தாண்டி மார்க்சிஸ்ட் கட்சியும், மலைவாழ் மக்கள் சங்கமும் பாதுகாப்பு அரணாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நின்று குற்றவாளிகள் அடையாளம் காண்ப்பிக்கப் பட்டனர். பாதிக்கப்பட்ட மக்கள் உறுதியோடு நின்று நீதி கேட்டு போராடியதன் விளைவாக நாடடிற்கே முன் உதாரணமாக வாச்சாத்தி வரலாற்று தீர்ப்பு அமைந்துள்ளது. இந்த தீர்ப்பால் நாட்டில் உள்ள பழங்குடி மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியும், மலைவாழ் மக்கள் சங்கமும் விளங்குகிறது. தருமபுரி மாவட்டச் செயலாளர், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம்.
உலக வரலாற்றில் ஒரு வழக் கில் குற்றம் சுமத்தப்பட்ட அனைவரும் குற்றவாளி கள் என தீர்ப்பு வழங்கியது வாச்சாத்தி வழக் கில்தான். இத்தீர்ப்பு 31 ஆண்டு கால போராட் டத்திற்கு கிடைத்த வெற்றி ஆகும். தருமபுரி மாவட்டம், பொருளாதார ரீதியில் மாநிலத்திலேயே மிகவும் பின்தங்கிய மாவட்ட மாகும். மலைகள் சூழ்ந்த இம்மாவட்ட மக்கள் தொகையில் பட்டியலின, பழங்குடி மக்கள் 22 விழுக்காடு பேர் ஆவர். இம்மக்களின் வாழ் வாதாரம் மிகவும் கடைக்கோடி நிலையில் உள் ளது. மாவட்டத்தின் பிரதான தொழில் விவசா யம். தொழில் வளர்ச்சியும், வேலைவாய்ப்பும் இல்லாமல் தவிக்கும் இளைஞர்கள் ஏராளம். வானம் பார்த்த பூமியைக் கொண்டுள்ள விவ சாயமும் பொய்த்துப் போன நிலையில் குறிப் பாக ஏழை, சிறு விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் வேலை தேடி வெளி மாநி லங்களுக்கு லட்சக்கணக்கில் குடிபெயர்ந்து செல்வது தொடர்கிறது. இளைஞர்களின் துயரம் வேலைவாய்ப்பின்றி தவிக்கும் மாவட்ட இளைஞர்களுக்கு, குறிப்பாக பழங்குடி இளை ஞர்களுக்கு வேலை தருவதாக கூறி அழைத்துச் சென்று வாழ்வாதாரத்தை சிதைத்த கொடுமை யையும் அனுபவித்தனர். 2017 ஆம் ஆண்டு சித் தேரி மலையிலிருந்து இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்ட பழங்குடி மக்கள் 7 பேர் ஆந்திரா வில் வனத்துறையினரால் சுட்டுக் கொல்லப் பட்ட கொடுமை அரங்கேறியது. சமீபத்தில் ஓசூர். அத்திப்பள்ளி அருகே பட்டாசு குடோ னில் நிகழ்ந்த வெடி விபத்தில் அரூர் அருகே யுள்ள அம்மாபேட்டையைச் சேர்ந்த பட்டிய லின இளைஞர்கள் 7 பேர் அநியாயமாக உயிரி ழந்தனர். பழங்குடி மக்களின் வாழ்வாதா ரத்தை காத்திட தொழில் வளர்ச்சி ஏற்படுத்தப் பட வேண்டும், இம்மக்களின் சமூக பொருளா தார முன்னேற்றத்திற்கு வழிவகை காண வேண் டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. வாச் சாத்தி தீர்ப்பில் உயர் நீதிமன்றமும் இத்தகைய பரிந்துரையை அளித்துள்ளது குறிப்பிடத்தக் கது.
தொடரும் மனித உரிமை மீறல்கள்
மறுபுறம் வனத்துறை அதிகாரிகள் வனத்தை ஒட்டியுள்ள ஏழை, எளிய மக்களின் மீது கருணை இல்லாமல் மிகக் கொடூரமாக நடந்து வருகின்றனர். பழங்குடி மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டு வருகின்றன. மாவட்டத்தின் பல பகுதிகளில் குறிப்பாக பென்னாகரம் ஒன்றியம் எர்ரப்பட்டி, ஏரியூர் ஒன்றியம் ஏமனூர், பாலக் கோடு ஒன்றியம் பிக்கனள்ளி, மல்லுப்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் வனத்தை ஒட்டி யுள்ள புறம்போக்கு நிலங்களில் காலம் கால மாக சாகுபடி செய்து வரும் விவசாயிகளை நில வெளியேற்றம் செய்ய வனத்துறையினர் முயன்று வருகின்றனர். வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் வனங்களில் ஆடு, மாடுகள் மேய்ப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளன. ஏரியூர் ஒன்றியம், குழிக்காடு கிராமத்தில் விவ சாயி ஒருவர் கள்ளத் துப்பாக்கி வைத்திருந்த தாகக் கூறி தேடுதல் வேட்டை என்ற பெயரால் அவரையும், அவரது குடும்பத்தினரையும் அடித்து துவம்சம் செய்துள்ளனர். கடுமை யான மனித உரிமை மீறல்கள் நடைபெற் றுள்ளன. பழங்குடி மக்களின் நிலங்களை பழங்குடி அல்லாத பண முதலைகள் அடிமாட்டு விலைக்கு வாங்கி விற்பனை செய்யும் ரியல் எஸ்டேட் வியாபாரமும் நடந்தேறி வருகிறது. அரூர் வட்டம் சிட்டிலிங் ஊராட்சியில் பல ஏக் கர் நிலங்கள் இவ்வாறு பத்திரப் பதிவு செய் யப்பட்டுள்ளன. மலைவாழ் மக்களின் நிலங் களை மாற்றுச் சமூகத்தினர் வாங்கக் கூடாது என்பது உள்ளிட்ட பழங்குடி மக்களின் உரிமை களைப் பாதுகாக்க 2006 ம் ஆண்டு நிறை வேற்றப்பட்ட வன உரிமைச் சட்டம் வலியுறுத் திய போதிலும் சட்டத்தை அமலாக்க வனத் துறையினரும், ஆட்சியாளர்களும் தயா ரில்லை. பழங்குடி மக்களுக்கு பல பகுதிகளில் சுடு காடும், சுடுகாட்டுப் பாதையும் பெரும் கேள்விக் குறியாகவே தொடருகிறது. பாப்பிரெட்டிப் பட்டி வட்டம் ஆலமரத்தூர், நொனங்கனூர் ஆகிய பகுதிகளில் இக்கோரிக்கையை முன் வைத்துப் போராடிய பழங்குடி மக்கள் மீது காவல்துறையினர் பொய் வழக்கு தொடுத் துள்ளனர். மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான பழங்குடி மக்களுக்கு இன்னமும் சாதிச் சான்றி தழ் கிடைக்கவில்லை. சாதிச் சான்றிதழ் இல் லாததால் உயர்கல்வி பயிலவும், வேலை வாய்ப்பு பெற்றிடவும் வழியின்றி ஆயிரம் ஆயி ரம் பழங்குடி மாணவர்கள் தவித்து வருகின்ற னர்.
அக்.18ல் மாபெரும் பொதுக்கூட்டம்
பழங்குடி மக்களின் வாழ்வாதாரம் காத் திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், மலை வாழ் மக்கள் சங்கமும் இடைவிடாமல் தொடர்ந்து போராடி வருகின்றன. இத்தகைய தொடர் போராட்டத்தின் விளைவாகவே வாச்சாத்தி மக்களுக்கு நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. இவ் வழக்கின் வெற்றிக்காகப் பாடுபட்ட போராளிக ளுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வருகிற அக்டோபர் 18 ஆம் தேதி மாலை 4 மணிக்கு அரூரில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. மாநிலச் செயலாளர் கே. பாலகிரு;ஷ ணன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர். குரலற்றவர்களின் குர லாய் ஒலிக்கும் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெறும் இக்கூட்டத்தில் அனைத்து தரப் பினரும் பெரும் திரளாகப் பங்கேற்க அன்பு ன் வேண்டுகிறோம்.