சேலம், பிப்.21- தமிழ் மன்னர்கள் நூல் வெளியிட்டு விழா சிவப்பு புத்தக தினமான புதனன்று, சிபிஎம் சேலம் மாவட்டக்குழு அலுவ லகத்தில் நடைபெற்றது. சேலம் தமிழ் மன்னர்களின் நூலின் மிக முக்கிய மூன்று பதிவுகள் 1.சேலத்தை ஆண்ட தமிழ் மன்னர்கள், 2.அவர்கள் வெளியிட்ட செப்பு காசுகள், 3.சேலம் அரசு அருங்காட்சியகத் தில் உள்ள தமிழ் கல்வெட்டுகளின் தொகுப்பு ஆகியவையா கும். சுமார் 1000 ஆண்டுகளின் வரலாற்று தொகுப்பு குறித்த புத்தகங்கள் வெளியிட்டு விழா, சிவப்பு புத்தக தினமான புத னன்று சிபிஎம் சேலம் மாவட்டக்குழு அலுவலகத்தில் நடை பெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் நூலை வெளியிட, சேலம் தபால் தலைமை அலுவலகத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற கட்சி தோழர்கள் டி.நேதாஜி, கே.ஆர்.கணேசன் ஆகியோர் நூலை பெற்றுக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில், சிபிஎம் மாவட் டச் செயலாளர் மேவை.சண்முகராஜா, தாலுகாச் செயலாளர் கே.எஸ்.பழனிசாமி, கிழக்கு மாநகரச் செயலாளர் பொன்.ரமணி, சேலம் பாரா மஹால் நாணயவியல் மற்றும் தபால் தலையியல் சங்க இயக்குநர் ஜீ.சம்சுதீன் (எ) சுல்தான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.