தாராபுரம், அக்.27– தாராபுரம் அருகே ரூ.13 கோடி மதிப்பிலான கோவில் நிலங் களை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்ட னர். திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், பெரிய குமார பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள விநாயகர் கோவிலுக்கு சொந்தமான 24 ஏக்கர் 65 சென்ட் புஞ்சை நிலத்தை அனுபவதாரர்கள் தானாக முன்வந்து கோயில் வசம் ஒப்படைத்தனர். அதேபோல் முண்டுவேலம்பட்டி கிராமம் பொட்டிக்காம்பாளையம் தான் தோன்றீஸ்வ ரர் கோயிலுக்கு சொந்தமான 36.96 ஏக்கர் புஞ்சை நிலம் என மொத்தம் 61.61 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு அங்கு கோயிலுக்கு சொந்தமான நிலம் என்ற அறிவிப்பு பெயர் பலகை வைக்கப்பட்டது. திருப்பூர் மண்டலம் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சி.குமரதுரை தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் இரா.செல்வராஜ், திருப்பூர் மாவட்ட இந்து சமய அறநிலைத்துறை நிலங்கள் பிரிவு வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன், தாராபுரம் சரக ஆய்வாளர் சா.ஆதிரை, சம்பந்தப்பட்ட திருக்கோயில் செயல் அலுவலர் சொ.சுந்தர வடிவேல் மற்றும் கோயில் பணியாளர்கள் உடன் இருந்தனர். மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.13 கோடி ஆகும்.