திருப்பூர், டிச. 22- காங்கேயம் அருகே ரூ.1 கோடி மதிப்புள்ள கோயில் நிலம் மீட்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், மங்கலப்பட்டி பாண்டீஸ்வரர் கோயில் உள்ளது. மேற்படி கோவிலுக்கு சொந்தமான நிலம் பூமாண்டவலசு கிராமம் புல எண் 88 ல் 3.86.00 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. மேற்படி கோவிலுக்கு சொந்தமான நிலம் ஐந்து ஆக்கிரமிப்புதாரர்கள் வசம் இருந்தது. இந்த நிலங்கள் திருப்பூர் உதவி ஆணையர் மற்றும் ஆலய நிலங்கள் தனி வட்டாட்சியர், காங்கேயம் சரக ஆய்வாளர், கோயில் தக்கார் மற்றும் கோவில் பணியாளர்கள் முன்னிலையில் ஆக்கிரமிப்புதாரர்களிடம் இருந்து கோயில் வசம் சுவாதீனம் எடுக்கப்பட்டது. இந்நிலத்தின் மதிப்பு சுமார் ஒரு கோடி ஆகும் என்று இந்து அறநிலையத் துறை அதி காரிகள் தெரிவித்துள்ளனர்.