districts

img

துணிக்கடையில் திருடுபோன பணம் மீட்பு

தருமபுரி, ஜன.22- தருமபுரியிலுள்ள தனியார் துணிக்கடையில் திருடு போன ரூ.13 லட்சத்து 93 ஆயிரத்து 790யை காவல் துறை யினர் மீட்டு, 2 பேரை கைது செய்தனர். தருமபுரி நகரில் உள்ள தனியார் துணிக்கடையில் ஜன. 16 ஆம் தேதியன்று ரூ.14 லட்சத்து 62 ஆயிரத்து 500 பணம் திருடுபோனது. தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் உத்தரவின்பேரில், போலீசார் தனிப் படை அமைத்து இதில் தொடர்புடையவர்களை தேடும் பணி  ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், திங்களன்று பணத்தை கொள்ளையடித்த தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பரத் குமார், மோகன்குமார் ஆகியோர் காவல் துறையினர் கைது  செய்து, சிறையில் அடைத்தனர். மேலும், அவர்களிடமி ருந்து ரூ.13 லட்சத்து 93 ஆயிரத்து 790யை போலீசார் மீட்ட னர். இதையடுத்து தருமபுரி நகர காவல் நிலையத்திற்கு  வந்த காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜோசுபாதம்,  திருட்டு பணத்தை பார்வையிட்டு, இதில் தொடர்புடையவர் களை பிடித்த காவலர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். அப் போது நகர காவல் ஆய்வாளர் வேலுதேவன், உதவி ஆய்வா ளர் விஜய் சங்கர் மற்றும் தலைமை காவலர் சந்திரசேகர் ஆகி யோர் உடனிருந்தனர்.