சொத்து வரி உயர்வை திரும்பப் பெறுக மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
ஈரோடு, மே 25- ஈரோடு மாநகராட்சியில் சொத்து வரி உயர்வை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் கடந்த மாதம் சொத்து வரி உயர்வு அறிவிக்கப்பட்டது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அரசாணையின்படி சொத்துவரி, காலிமனை வரி ஆகியவற்றை சீராய்வு செய்து 2022 ஆம் ஆண்டு ஏப்.1 ஆம் தேதி முதல் அமல்படுத்திட நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது. இதுகுறித்து, ஈரோடு மாந கராட்சியில் கடந்த மாதம் 11 ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானித்து, வரி உயர்வு அறிவிப்பு நாளிதழ்களில் வெளி யானது. அதில் 30 நாட்களுக்குள் ஆலோ சனைகள் மட்டும் ஆட்சேபணைகள் தெரி விக்கலாம் எனக் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், செவ்வாயன்று மாலை மாமன்ற அவசர கூட்டம் நடைபெற்றது. அதில், மாநகராட்சியில் உள்ள 60 வார்டு களின் தெருக்களின் அமைவிடம், உள் கட்டமைப்பு, அடிப்படை வசதிகள் ஆகிய வற்றை மையமாகக் கொண்டு ஏ,பி,சி என வகைப்படுத்தி 4 மண்டலாகப் பிரித்து சொத்து வரி பொது சீராய்வு செய்யப்பட் டுள்ளது. அதன்படி,66 ச.அடிக்குள் உள்ள கட்டடங்களுக்கு சதுர அடிக்கு 1.25 விழுக்கா டும், 1200 ச.அடி வரை 1.5 விழுக்காடும், 1800 ச.அடிக்கு 1.75 விழுக்காடும், அதற்கு மேல் 2 விழுக்காடும் உயர்வு அறிவிக்கப்பட் டுள்ளது. காலி மனைகளுக்கு 60 பைசா விலிருந்து 120 ஆக அதாவது, 100 விழுக்காடு வரி உயர்வு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆர்.ரகுரா மன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது, கொரோனா அச்சுறுத்தலால் ஏற்பட்ட தொழில் பாதிப்பிலிருந்து விடுபட் டுள்ளோம். பலரும் வேலையிழந்து, வரு வாய் இழந்து வாழ்க்கை முடங்கியது. இதி லிருந்து மீளும் நிலையில், பஞ்சு, நூல் விலை உயர்வு, தொழில் நசிவு, விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சொத்து வரி உயர்வு அறிவிக்கப்பட்டுள் ளது. இவ்வரி உயர்வு மக்களை மேலும் பாதிக்கும். எனவே, மாநகராட்சி நிர்வாக மும், தமிழக அரசும் சொத்து வரி உயர் வினை திரும்பப் பெற வேண்டும் என்று கூறி யுள்ளார்.
நாமக்கல்லில் ஜமாபந்தி - வருவாய் தீர்வாயம் அலுவலர்கள் நியமனம்
நாமக்கல், மே 25- நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 8 வட்டங் களுக்கும் வருவாய் தீர்வாயம் அலுவலர் கள் நியமனம் செய்யப்பட்டு, மே 25 ஆம் தேதியன்று முதல் ஜீன் 8 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதன்படி, சேந்தமங்கலம் வட்டத்திற் கான வருவாய் தீர்வாயம்மே 25 ஆம் தேதியன்று முதல் ஜீன் 2 ஆம் தேதி வரை மாவட்ட வருவாய் அலுவலர் ந.கதிரேசன் தலைமையில் நடைபெறவுள்ளது. இதே போல், நாமக்கல் வட்டத்திற்கான வருவாய் தீர்வாயம் மே 25 ஆம்தேதிமுதல் ஜீன் 3ஆம் தேதி வரை மாவட்ட பிற்படுத்தப்பட் டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலு வலர் மோகனசுந்தரம் தலைமையிலும், இராசிபுரம் வட்டத்திற்கான வருவாய் தீர்வாயம் மே 25 ஆம் தேதி முதல் ஜீன் 2 ஆம் தேதி வரை மாவட்ட ஆதி திராவிடர் நல அலு வலர் மு.மரகதவள்ளி தலைமையில் நடைபெறவுள்ளது. கொல்லிமலை வட்டத் திற்கான வருவாய் தீர்வாயம் மே 25 ஆம் தேதி முதல் மே 26ஆம் தேதி வரை சமூக பாதுகாப்புத்திட்ட தனித் துணை ஆட்சியர் ஜெ.தேவிகாராணி தலை மையிலும், மோகனூர் வட்டத்திற்கான வரு வாய் தீர்வாயம் மே 25 ஆம்தேதிமுதல் ஜீன் 1 ஆம் தேதி வரை நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் த.மஞ்சுளா தலைமையில் நடைபெறவுள்ளது. திருச்செங்கோடு வட் டத்திற்கான வருவாய் தீர்வாயம்மே 25 ஆம் தேதி முதல் ஜீன் 8 ஆம் தேதி வரை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்).நடேசன் தலைமையிலும், குமாரபாளையம் வட்டத்திற்கான வருவாய் தீர்வாயம் மே 25 ஆம் தேதி முதல் மே 27 ஆம் தேதி வரை திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் தே.இளவரசி தலைமையி லும் நடைபெறுகின்றன.
சாயக்கழிவு நீரை வெளியேற்றம் 11 ஆலைகளுக்கு சீல்
நாமக்கல், மே 25- நாமக்கல்லில், சாயக்கழிவு நீரை வெளியேற்றிய 11 ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் பகுதியில் செயல்படும் சாய ஆலைகளில், பெரும்பாலானவை சாயக் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றுகின்றன. இவை ஆற்றில் கலப்பதால் சுத்தமான தண்ணீர் மாச டைகிறது. இந்த தண்ணீரை பயன்படுத்தும் பொதுமக்கள் அலர்ஜி உள்பட பல்வேறு நோய்களால் பாதிக்கப் படுகின்றனர். மேலும், கால்நடைகளும், மீன்களும் பாதிக் கப்படுகின்றன. இதனால், சென்னை மாசுகட்டுபாட்டு வாரிய தலைமை அலுவலகத்தின் உத்தரவின்பேரில் குமாரபாளையம் மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள், விதி மீறி செயல்பட்ட சாய ஆலைக்கு மின் இணைப்பு துண்டித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.இதன் தொடர்ச்சியாக பள்ளிப் பாளையத்தில் சமயசங்கிலி, ஆவத்திபாளையம், களியனூர் சுற்றுவட்டாரபகுதியில்உள்ள11 சாய ஆலை களுக்கு மாசுகட்டுபாட்டுவாரியம் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் சேர்ந்து 11 சாய ஆலைகளுக்கும் சீல் வைத்து, நடவடிக்கை எடுத்துள்ளனர்.
முழு கொள்ளளவை எட்டும் நிலையில் வரட்டுப்பள்ளம் அணை
நாமக்கல், மே 25- தொடர் மழையால் வரட்டுப்பள்ளம் அணை முழு கொள்ளளவை எட்டும் நிலையை ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட் களாக மழை பெய்துவரும்நிலையில், மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துவருகிறது.குறிப்பாக, அந்தியூர் அடுத்த பர்கூர் மலை பகுதி அடிவார பகுதியில் அமைந்துள்ளது வரட் டுப்பள்ளம் அணை. இந்த அணைப் பகுதியில் தேக்கி வைக்கப்படும் நீர், வன விலங்குகளுக்கு கோடை காலங்களில் தாகம் தீர்ப்பதற்காகவும், விவசாயிகளின் பாசனத்திற்கும் பயன்பட்டு வருகிறது.அணையில் 33.5 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது. அந்தியூர் மற் றும் வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பரவலாக தொடர் மழை பெய்து வந்தது. இத னால், 13 ஆம்தேதி 28.58 அடி தண்ணீர் இருந் தது. இது படிப்படியாக உயர்ந்து 14 ஆம் தேதி 29.56. அடியும்,16 ஆம் தேதி 30.02 அடியும், 18 ஆம்தேதி 31.82 அடியும்,20 ஆம் தேதி 32.19 அடியும், 21 ஆம் தேதி 32.45 அடி யாக உயர்ந்தது. இந்த நிலையில்,33.5 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுப்பள்ளம் அணையில், தற்போது 32.45 அடி தண்ணீர் இருப்பு உள்ளது. எந்த நேரத்திலும் அணை நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. மேலும், கடந்த 2 நாட்களாக மலைப்பகுதிகளிலும், வரட்டுப்பள்ளம் அணை சுற்றுப் பகுதிகளிலும் மழை பெய்ய வில்லை. தற்போதைய நிலவரப்படி அணை யின் நீர்மட்டம் 32.64 அடியாக உள்ளது. பர்கூர் மலை பகுதிகளில் மழை பெய்தால் விரைவில் அணையின் முழு கொள்ளள வான 33.5 அடி எட்டிவிடும் என எதிர் பார்க்கப்படுகிறது.இதேபோல் மாவட்டத் தில் உள்ள நீர் நிலைகள் தொடர் மழை யால் நிரம்பி வருகிறது. இதனால் விவசாயி கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சில்லரை கொடுக்காத பயணி மீது தாக்குதல் தனியார் பேருந்தின் ஒட்டுநர், நடத்துநர் அடாவடி
கோவை, மே 25- கோவையில் பயணசீட்டுக்கு சரியான சில்லரை கொடுக் காத பயணியை தனியார் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்து நர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. கோவை மாவட்டம், அன்னூரை அடுத்த பொங்கலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கசாமி. கூலித் தொழிலாளி யான இவர் சம்பவத்தன்று அன்னூரில் இருந்து புளியம்பட்டி செல்வதற்காக தனியார் பேருந்தில் ஏறியுள்ளார். பயணச்சீட்டு வாங்கும் போது ரங்கசாமி, நடத்துநரிடம் சரியான சில்லரை கொடுக்கவில்லை என தெரிகிறது. இத னால் நடத்துநருக்கும், ரங்கசாமிக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பேருந்தை நிறுத் திய ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இருவரும் சேர்ந்து ரங்க சாமியை பேருந்தில் இருந்து இறக்கி அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில், ரங்கசாமிக்கு பலத்த காயம் ஏற்பட் டது. இச்சம்பவத்தை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டி ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்து, சமூக வலைதளங்களில் பகிர்ந்த நிலையில், இந்த வீடியோ தற்போது வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரூ.60 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்
நாமக்கல், மே 25- நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், நாமகிரிப் பேட்டையில் உள்ள ராசி புரம் ஆர்.சி.எம்.எஸ்.சங்கத் தில் செவ்வாயன்று மஞ்சள் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் ஒடுவன்குறிச்சி, நாமகிரிப்பேட்டை, ஈரோடு, சேலம், ஆத்தூர் போன்ற பல்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்தி ருந்து மஞ்சள் ஏலம் எடுத்த னர். இதில், விரலி ரகம் 1,000 மூட்டைகளும், உருண்டை ரகம் 350 மூட்டைகளும், பனங்காலி ரகம் 40 மூட்டைகளும் விற்பனைக் காக கொண்டு வரப்பட்டு இருந்தன. ஒரு குவிண்டால் விரலி ரகம் குறைந்தபட்சம் ரூ.6,365 முதல் அதிகபட்ச மாக ரூ.8,989 க்கும் ஏலம் போனது. இதேபோன்று உருண்டை ரகம் குறைந்த பட்சம் ரூ.5,743க்கும் அதிக பட்சமாக ரூ.7,369க்கும் ஏலம் போனது. பனங்காலி ரகம் குறைந்தபட்சம் ரூ.10,112 க்கும், அதிகபட்சமாக ரூ.16, 012 க்கும் ஏலம் விடப்பட்டது. செவ்வாயன்று நடந்த ஏலத்திற்கு வந்திருந்த1,390 மஞ்சள் மூட்டைகள் ரூ.60 லட்சத்திற்கு விற்பனையா னது.
கோவை - பொள்ளாச்சி பயணிகள் ரயிலை திண்டுக்கல் வரை நீடிக்க கோரிக்கை
உடுமலை, மே 25- கோவை - பொள்ளாச்சி பயணிகள் ரயிலை ஆயிரக்கணக்கானோர் பய னடையும் வகையில் திண்டுக்கல் வரை நீட்டித்து இயக்குவதற்கு தென்னக ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும்படி உடுமலைபேட்டையைச் சேர்ந்த தென்னக ரயில்வே மதுரைக் கோட்ட பயணிகள் ஆலோசனைக் குழு உறுப்பினர் எஸ்.சண்முகசுந்தரம் கோரியுள்ளார். இதுகுறித்து, அவர் தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப் பதாவது, சென்னையில் இருந்து மதுரை செல்லும் பாண்டியன் விரைவு ரயிலில் அதிகாலை 4 மணியளவில் திண்டுக்கல்லுக்கு வரும் பயணிகள் குறிப்பாக, பக்தர்கள் பழனிக்குச் செல்வதற்கு அங்கிருந்து பேருந்தில் பயணிக்க வேண்டியுள்ளது. ஏராளமா னோர் இதுபோல் தினமும் பயணம் செய்கின்றனர். அதேபோல் பழனியில் இருந்து மடத்துக்குளம், உடுமலை, பொள்ளாச்சி, கோவை வரை ஆயிரக் கணக்கானோர் தினமும் வேலைக்குச் சென்று வருகின்றனர். இந்நிலையில், கோவையில் இருந்து பொள்ளாச்சி வரை இயக்கப் படும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் (06419) இரவு 7.30 மணிக்கு பொள் ளாச்சி நிலையத்துக்கு வருகிறது. அதன் பிறகு அங்கேயே நிறுத்தி வைக் கப்பட்டு இருக்கிறது. மறு நாள் காலை 7.30 மணிக்கு இதே ரயில் (06420) பொள் ளாச்சி நிலையத்தில் இருந்து கோவைக்கு புறப்பட்டுச் செல்கிறது. எனவே, பொள்ளாச்சியில் இருந்து இயக்கப்படும் 06420 ரயிலை அதி காலை 4.30 மணிக்கு திண்டுக்கல் லில் இருந்து புறப்பட்டு ஒட்டன்சத்தி ரம், பழனி, மடத்துக்குளம், உடுமலை வழியாக 7.30 மணிக்கு பொள்ளாச் சிக்கு வந்து அங்கிருந்து கோவைக்கு செல்வது போல மாற்றினால் ஆயிரக் கணக்கான அன்றாட பயணம் செய்யும் பயணிகளும், சென்னையில் இருந்து வரும் பழனி கோயில் பக்தர்களும் பய னடைவார்கள். எனவே, குறைவான பயன்பாட்டில் இருக்கும் கோவை - பொள்ளாச்சி பயணிகள் சிறப்பு ரயிலை பழனி வழி யாக திண்டுக்கல் வரை இயக்கி னால் சென்னையில் இருந்து சேலம், கோவை வழியாக கேரளா செல்லும் வழித்தடத்தையும், சென்னையில் இருந்து திருச்சி, திண்டுக்கல், திரு நெல்வேலி, மதுரை வழியாக கன்னி யாகுமரி செல்லும் வழித்தடத்தையும் இணைக்கக் கூடியதாக இந்த ரயில் அமையும். இதனால், ஏராளமான பய ணிகள் பயனடைவார்கள். ரயில்வே நிர்வாகத்துக்கும் வருவாய் கூடும். எனவே, முதல்கட்டமாக பொள் ளாச்சியில் இருந்து பழனி வரை இந்த ரயிலை இயக்குவதற்கு உடனடியாக டவடிக்கை எடுக்க வேண்டும், ரயில்வே இருப்புப் பாதை பணி நிறை வடைந்தவுடன் திண்டுக்கல் வரை நீட் டிக்க ஆவன செய்ய வேண்டும் என்று எஸ்.சண்முகசுந்தரம் கேட்டுக் கொண் டுள்ளார்.
அமைச்சர் சாமிநாதன் தாயார் காலமானார்
திருப்பூர், மே 25– தமிழ்நாடு மாநில செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமி நாதன் தாயார் தங்கமணி அம்மாள் (89) சிறிது காலம் உடல்நலக்குறைவாக இருந்த நிலையில் புதன்கிழமை கால மானார். அவரது உடல் அடக்கம் வியாழக்கிழமை காலை 11 மணியளவில் காங்கயம் வட்டம், முத்தூர் பங்களா தோட் டத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலைவாழ் மக்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
நாமக்கல், மே 25- தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் கொல்லிமலை சாளக்காடு 3 ஆவது கிளை மாநாட்டில் கிளை செயலாள ராக ஆர்.கோபால், தலைவராக மணிகண்டன், துணை தலைவராக தமிழ் செல்வன், துணை செயலாளராக மாணிக் கம், பொருளாளராக அசோக் ஆகியோரை உள்ளடக்கிய 26 பேர் கொண்ட கமிட்டி தேர்வு செய்யப்பட்டது.