districts

img

ஆட்குறைப்பு செய்த பணியாளர்களை மீண்டும் பணியில் அமர்த்திடுக

உதகை, ஜூன் 24- ஆட்குறைப்பு செய்த தூய்மை பணி யாளர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என வலியுறுத்தி உதகையில் நக ராட்சி மற்றும் ஊரக உள்ளாட்சித்துறை ஊழி யர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். உதகை நகராட்சியில் பணிபுரியும் தூய் மைப் பணியாளர்கள் நிர்வாகத்தின் உத்தர வுப்படி, குப்பைகளை தரம்பிரித்து கொட்டி வருகின்றனர். சுமார் 600 பேர் பணிபுரிந்த நிர்வாகத்தில் தற்போது ஒப்பந்த ஊழி யர்கள் உட்பட 300 பேர் தான் தூய்மைப் பணி யில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மக் கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம்பிரிக் காமல் ஒன்றாக குப்பைக்குழியில் கொட்டப் படுகிறது. உதகை போன்ற முக்கியமான பகு திகளில் சூழலை பாதுகாக்க வேண்டிய தேவை உள்ளது. எனவே, ஆட்குறைப்பு செய்த தூய்மை பணியாளர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என வலியு றுத்தி நகராட்சி மற்றும் ஊரக உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர்.  உதகை நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் தலைவர் பழனிச்சாமி தலைமை தாங்கி னார். பொருளாளர் ரவி துவக்கி வைத்தார். இதில், செயலாளர் சேகர், கௌரவத் தலை வர் எல்.சங்கரலிங்கம், சிஐடியு மாவட்ட  பொருளாளர் நவீன் சந்திரன் உள்ளிட்ட நூற் றுக்கும் மேற்பட்ட தூய்மைப்பணியாளர் கள் பங்கேற்றனர். முடிவில் சங்கத்தின் நிர் வாகி ஆறுமுகம் நன்றி கூறினார்.