பொங்கல் பரிசுத்தொகையுடன் ரேசன் கடை ஊழியர் தலைமறைவு
கோவை, ஜன.21- கோவையில் பொதுமக்களுக்கு வழங்கவிருந்த பொங் கல் பரிசுத்தொகையுடன் தலைமறைவான ரேசன் கடை ஊழி யரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கோவை மாவட்டத்தில் உள்ள 11 லட்சத்து 4 ஆயிரத்து 942 ரேசன் கார்டுகளுக்கு சம்பந்தப்பட்ட ரேசன் கடை ஊழியர்க ளுக்கு பொங்கல் பரிசுத்தொகை வழங்க ஏற்பாடு செய்யப் பட்டது. இதில் 10 லட்சத்து 31 ஆயிரத்து 876 ரேசன் அட்டை தார்களுக்கு பணம் கொடுக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 73 ஆயிரத்து 66 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகை வழங்கப்படவில்லை. இந்நிலையில், அந்தந்த ரேசன் கடை பொறுப்பாளர்கள் மீதமுள்ள தொகையை அதிகாரிக ளிடம் ஒப்படைத்தனர். ஆனால், சாய்பாபா காலனி பகுதி யில் உள்ள அமுதம் ரேசன் கடை ஊழியர் மதியரசு என்ப வர், பொங்கல் பரிசுக்கு வழங்கப்படவிருந்த பணத்தை திரும்ப செலுத்தாதது தெரியவந்தது. இதுகுறித்து அமுதம் அங்காடியில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட போது, 719 பேருக்கு முறையாக பணத்தை கொடுத்து இருப்பதும், 122 பேருக்கு பொங்கல் பரிசுத்தொகை வழங்காமல் இருப்ப தும் தெரியவந்தது. இதனையடுத்து ரூ.1.22 லட்சத்தை திரும்ப ஒப்படைக்குமாறு அதிகாரிகள் தெரிவித்த நிலையில், ஊழியர் மதியரசு பணத்துடன் தலைமறைவானார். இதுகு றித்து கடை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் மதியரசு மீது வழக்குப்பதிவு செய்து அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
உதகை ஏரிக்கு 45 புதிய படகுகள் வாங்க முடிவு
உதகை, ஜன.21- உதகை ஏரியில் சுற்றுலாப் பயணிகளுக் காக புதிதாக 45 படகுகள் வாங்க சுற்றுலா வளர்ச்சி கழகம் திட்டமிட்டுள்ளது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத் தின் கீழ், உதகை ஏரியில் சுற்றுலாப் பயணிக ளுக்காக படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. 100க்கும் அதிகமான மிதிபடகுகள் இருந்த நிலையில், பெரும்பாலான மிதிபடகுகள் சேதமடைந்ததால் புதிதாக படகுகள் வாங்க சுற்றுலா வளர்ச்சி கழகம் முடிவு செய்தது. இந்நிலையில், முதற்கட்டமாக 12 படகுகள் உதகை படகு இல்லத்திற்கு வந்துள்ளன. இதுகுறித்து படகு இல்ல மேலாளர் சாம்சன் கனகராஜ் கூறுகையில், உதகை ஏரியில் சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக 45 படகு கள் வாங்க திட்டமிடப்பட்டு ஒப்பந்தம் கோரப் பட்டுள்ளது. 3 நிறுவனங்கள் இறுதி செய்யப் பட்டுள்ள நிலையில், அந்த நிறுவனங்கள் சார் பில் தலா 4 படகுகள் சோதனை முயற்சி அடிப்படையில் இங்கு கொண்டு வரப்பட்டுள் ளன. அவற்றில் எது சிறந்த முறையில் பலன் அளிக்கிறதோ? அந்த நிறுவனத்தில் இருந்து முழு படகுகளும் வாங்கப்படும். தற்போது புதிதாக வாங்கப்படும் படகுகளில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன, என்றார்.
பட்டுக்கூடு ஏலம்
தருமபுரி, ஜன.21- தருமபுரி பட்டுக்கூடு அங் காடியில் மஞ்சள், வெள்ளை என தினசரி பட்டுக்கூடுகள் ஏலம் நடைபெறும். அதன்படி, சனியன்று நடைபெற்ற ஏலத்திற்கு 32 விவசாயிகள், 2675 கிலோ பட்டுக்கூடுகளை கொண்டு வந்திருந்தனர். வெண்பட்டு கூடுகள் அதிகபட்சம் கிலோ 518 ரூபாயும், குறைந்தபட் சம் 308 ரூபாயும், சராசரி 422 ரூபாய் என மொத்தம் ரூ.11 லட்சத்து 29 ஆயிரத்து 753க்கு விற்பனையானது என ஏல அங்காடி அதிகாரி கள் தெரிவித்தனர்.
விபத்து எற்படுத்தும் வகையில் உள்ள உடைந்த மின் இணைப்பு பெட்டிகள்
உடுமலை, ஜன.21- உடுமலை நகரின் முக்கிய வீதிகளில் உயரமான கம்பங் களில் உள்ள மின் இணைப்பு பெட்டிகள் விபத்து ஏற்படுத்தும் வகையில் உடைந்துள்ளதை சரி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலை நகராட்சியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்ட நிலையில், நகாரட்சியின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் நிதி ஒதுக்கபட்டது. இந்த நிதியில் நகரின் முக்கிய வீதியான பொள்ளாசி சாலை, தளி சாலை, ராஜேந்திர சாலை, தாராபுரம், திருப்பூர் மற்றும் பழனி சாலைகளில் உயர்ந்த மின் கம்பங்கள் அமைத்து நிலத்தடியில் மின் கம்பிகளை புதைக்கும் வகையில் நூற் றுக்கணக்கான மின் விளக்குகள் அமைக்கப்பட்டன. இந் நிலையில், போக்குவரத்து அதிகமுள்ள சாலைகளில் அமைக் கபட்டு இருக்கும் மின் கம்பங்களில் இருக்கும் மின் பெட்டிகள் உடைந்து விபத்து ஏற்படும் வகையில் உள்ளன. கைக்கு எட் டும் படி உள்ளதை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கான்கிரீட் தடுப்புச்சுவர் அமைக்க எதிர்ப்பு
நாமக்கல், ஜன.21- பள்ளிபாளையத்தில் கான்கிரீட் தடுப்புச்சுவர் அமைக்க அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத் தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் சாலை விரி வாக்கம் மற்றும் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடை பெற்று வருகிறது. இந்நிலையில், பள்ளிப்பாளையம் டிவிஎஸ் மேடு என்ற பகுதியில், சாலையின் நடுவே கான்கிரீட் தடுப் புச்சுவரானது சுமார் ஒன்றரை அடிக்கு மேல் அமைக்கப்பட்டு வருகிறது. தடுப்பு சாலை அமைக்கப்பட்டால், மாதாபுரம் என்ற பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், எதிர்சாலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்படும். இப்பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளதால், பொதுமக்களுக்கு மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்படும். எனவே, எதிர்சாலைக்கு செல்லும் வகையில் வழிவிட்டு கான்கிரீட் தடுப்புச்சுவர்களை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி, கான்கீரிட் சாலை அமைக்கும் இடத்தை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்த தகவலின்பேரில் அங்கு விரைந்த பள்ளிபாளையம் நகர்மன்ற தலைவர் மோ.செல்வராஜிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அப்போது, நெடுஞ்சா லைத்துறை அதிகாரிகளிடம் பேசி பொதுமக்கள் பாதிக்க வண் ணம் கான்கிரீட் தடுப்புச்சுவர் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நகர்மன்ற தலைவர் உறுதியளித்தார்.
தருமபுரியில் 4 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்
தருமபுரி, ஜன.21- தருமபுரி மாவட்டத்தில் நடை பெறவிருந்த 4 குழந்தை திருமணங் களை தடுத்து நிறுத்திய அரசு அதி காரிகள், சிறுமிகளை மீட்டு காப்ப கத்தில் ஒப்படைத்தனர். தருமபுரி மாவட்டத்தில் 4 குழந்தை திருமணங்கள் நடைபெற வுள்ளதாக தருமபுரி குழந்தைகளுக் கான இலவச அழைப்பு எண் 1098 என்ற எண்ணிற்கு புகார் வந்துள்ளது. அதன்பேரில், குழந்தை பாதுகாப்பு பணியாளர்கள், காவல் துறையினர், வருவாய் துறையினர் மற்றும் ஒருங் கிணைந்த சேவை மைய பணியாளர் கள் ஆகியோர்கள் இணைந்து நேரில் சென்று கள விசாரணை மேற்கொண் டனர். இதில் நல்லம்பள்ளி வட்டத் தைச் சேர்ந்த 17 வயது சிறுமி, தரும புரி வட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, கொண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஆகியோ ருக்கு ஞாயிறன்று திருமணம் நடை பெறுவதாக இருந்தது. மேலும், அரூர் வட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறு மிக்கு திங்களன்று திருமணம் நடை பெறுவதாக ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது தெரியவந்தது. இதையடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி, மேற்கண்ட நான்கு குழந்தை திரு மணங்களையும் அதிகாரிகள் தடுத்து நிறுத்தி, சிறுமிகள் அனைவரும் குழந் தைகள் நல குழும வரவேற்பு மையத் தில் தங்க வைக்கப்பட்டனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி கூறுகையில், மாவட்டத்தில் உள்ள 18 வயது பூர்த்தியடையாத சிறுமிகளுக்கும், 21 வயது பூர்த்திய டையாத சிறுவர்களுக்கும் பெற் றோர்கள் எவரேனும் திருமணம் ஏற் பாடு செய்யதாலோ அல்லது திரும ணம் செய்து வைத்தார்கள் என கண்ட றியப்பட்டால் அவர்கள் மீது காவல் துறை மூலம் சட்ட ரீதியாக கடுமை யான நடவடிக்கைகள் மேற்கொள் ளப்படும். மேலும், இதுபோன்ற இளம் வயது திருமணம் மற்றும் குழந்தை களுக்கு எதிரான பாலியல் வன்கொ டுமை, குழந்தை தொழிலாளர்கள், பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான செயல் கள் நடைபெறுவது கண்டறியப்பட் டால் உடனடியாக குழந்தைகளுக் கான இலவச அழைப்பு எண்.1098 என்ற எண்ணிற்கோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக தொலைபேசி எண்.04342-232234 என்ற எண் ணிற்கோ புகார் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
இன்று மின்தடை
உடுமலை, ஜன.21- திருப்பூர் மாவட்டம், உடு மலை தாலூகா, பூளவாடி துணை மின்நிலையத்தில் திங்களன்று (இன்று) பரா மரிப்பு வேலைகள் நடை பெற உள்ளது. இதனால் பூள வாடி, பொம்மநாயக்கன் பட்டி, கள்ளப்பாளையம், பெரியபட்டி, கள்ளப்பாளை யம், குப்பம்பாளையம், ஆ. அம்மாபட்டி, தொட்டியன் துறை, மானூர்பாளையம், பெரியகுமாரபாளையம், வடுகபாளையம், பொட்டிக் காம்பாளையம், ஆத்துகி ணத்துபட்டி, சிக்கனூத்து, முத்துசமுத்திரம், கொள்ளுப் பாளையம், அமந்தகடவு, லிங் கமநாயக்கன்புதூர், சுங்கார மடக்கு மற்றும் குடிமங்கலம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோ கம் இருக்காது.
சரக்கு ஆட்டோவில் திடீர் தீ விபத்து
நாமக்கல், ஜன.21- சங்ககிரியில் இருந்து ஈரோடு நோக்கி வெப்படை வழியாக சரக்கு ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந் தது. அப்பொழுது சின்னார் பாளையம் பகுதி அருகே வந்த போது, சரக்கு ஆட்டோ மேலே புகை வருவதை கண்ட வாகன ஓட்டி உடனடி யாக அருகில் இருந்த வாட் டர் வாஷ் செய்யும் கடையில் வண்டியை நிறுத்தினார். அதற்குள்ளாகவே தீ மள வென பரவியது. உடனடி யாக வாட்டர் வாஷ் கடையி லிருந்த ஊழியர்கள் தண் ணீரை பீச்சி அடித்து சரக்கு ஆட்டோவின் மேல் இருந்த தீ மேலும் பரவாமல் முழுமை யாக அணைத்தனர். வெப் படை பகுதியில் ஒரு சிலர் பட் டாசு வெடித்ததாக கூறப் படும் நிலையில், அந்த பட் டாசு தீப்பொறி அவ்வழியே சென்ற சரக்கு ஆட்டோ மேல் பட்டு தீ விபத்து ஏற்பட் டிருக்கலாம் என கூறப்படு கிறது.