districts

ஓய்வுபெற்ற அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்கள் பேரணி

தருமபுரி, ஜன.19- வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி ஓய்வுபெற்ற அங்கன்வாடி,  சத்துணவு ஊழியர்கள் கருப்புப்பட்டை அணிந்து பேரணியில் கலந்து கொண்டனர். சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்க ளுக்கு காலமுறை ஊதியம், முறையான ஓய்வூதியம் வழங்க வேண்டும். சிறப்பு பென் சன் ரூ.6750யை அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும். அரசுத்துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களில் தகுதியுள்ள சத்துணவு, அங் கன்வாடி பணியாளர்களை பணியமர்த்தி, வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். காலை சிற்றுண்டி திட் டத்தை, சத்துணவு ஊழியர்களிடம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி ஓய்வுபெற்ற அங்கன்வாடி, சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கருப்பு பட்டை அணிந்து பேரணியில் கலந்து கொண்டனர். முன்னதாக, தருமபுரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு துவங்கிய பேரணிக்கு சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் சுமதி தலைமை வகித்தார். அனைத்துத்துறை ஓய் வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.பெரு மாள் பேரணியை துவக்கி வைத்தார். மாநில துணைத்தலைவர்கள் இ.கிருஷ்ணமூர்த்தி, துரை, மாவட்டத் தலைவர் பி.சுப்பிரமணி யன், மாவட்டச் செயலாளர் எம்.மதலைமுத்து  ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி உரை யாற்றினர். ஜாக்டோ - ஜியோ நிதி காப்பாளர் கே.புகழேந்தி, அரசு போக்குவரத்து கழக  ஓய்வூதியர் சங்க மாநில துணைத்தலைவர்  கே.குப்புசாமி ஆகியோர் வாழ்த்தி பேசினர். தருமபுரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு துவங்கிய பேரணி பிஎஸ்என்எல் அலுவல கம் முன்பு நிறைவடைந்தது. இதன்பின் விளக் ககூட்டம் நடைபெற்றது.