ஈரோடு, மே 11- மாதாந்திர மருத்துவப்படியை உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஓய்வூதியர்கள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். சிஜிஎச்எஸ் மருத்துவமனை களுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். மருத்துவ சிகிச்சை கட்டணங்களை தற்போதைய நிலவரப்படி உயர்த்த வேண்டும். மருத்துவக் கட்ட மைப்பை தேசிய மயமாக்க வேண் டும். சிஜிஎச்எஸ் மையங்களில் சிறப்பு மருத்துவர்களை நியமனம் செய்ய வேண்டும். மாதாந்திர மருத் துவப்படியை ரூ.3 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்பன உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அஞ்சல், ஆர்எம்எஸ் ஓய்வூதியர்கள் ஈரோட் டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு அஞ்சல் தலைமையகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு சங்கத்தின் தலைவர் சுப்பிர மணியன் தலைமை வகித்தார். செய லாளர் ராமசாமி கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினார். இதில், போக்குவரத்து ஓய்வூதியர் சங்க மண்டலத்தலைவர் ஜெகநாதன், பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்க மாநில துணைத்தலைவர் என்.குப் புசாமி உட்பட பலர் கலந்து கொண்ட னர். நிறைவாக, பொருளாளர் பழனி வேல் நன்றி கூறினார்.
திருப்பூர்
திருப்பூர் பிஎஸ்என்எல் அலுவல கம் முன்பாக புதனன்று காலை நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அஞ்சல் மற்றும் ஆர்எம்எஸ் ஓய்வூ தியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.ரங்கசாமி தலைமை வகித்தார். இதில் கோரிக்கைகளை வலியு றுத்தி பிஎஸ்என்எல் தொலைத் தொடர்புத் துறை ஓய்வூதியர்கள் சங்க மாநில நிர்வாகி பா.சௌந்தர பாண்டியன், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநில உதவிச் செயலாளர் எஸ்.சுப்பிரமணியன், அஞ்சல் மற் றும் ஆர்எம்எஸ் ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் என்.கருப்ப சாமி ஆகியோர் உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பிஎஸ் என்எல் மற்றும் தொலைத் தொடர்பு, அஞ்சல் மற்றும் ஆர்எம்எஸ் துறைக ளில் பணி ஓய்வு பெற்ற ஓய்வூதியர் கள் திரளானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.