districts

img

பள்ளி வளாகத்தில் புகுந்த மழை நீர்

சேலம், அக்15- சேலம், தாரமங்கலத்தில் உள்ள  ஊராட்சி பள்ளி வளாகத்தைச்சுற்றி மழை நீர் சூழ்ந்ததால் குழந்தைகள், பெற்றோர்கள் அவதியடைந்தனர்.  சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகிலுள்ள அமரகுந்தியில் ஊராட்சி  ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 190 குழந்தை கள் படித்து வருகின்றனர். மேலும் இந்த  வளாகத்தில் அங்கன்வாடி மையத்தில்  20 குழந்தைகள் பயின்று வருகின் றனர். இந்நிலையில், வெள்ளியன்று இரவு  பெய்த கனமழையால் சாலையில் பெரு கெடுத்து ஓடிய மழைநீர் அருகில் உள்ள  வயல்வெளியில் புகுந்து பள்ளி வளாகம் முழுவதும் சூழ்ந்து கொண் டது.  மழைநீர் வெளியேற வழியில் லாமல் வளாகத்தில் குளம் போல் தேங் கியது,   இதனால் வழக்கம் போல் காலை யில் பள்ளிக்கு வந்த பள்ளி மாணவர்கள்  உள்ளே செல்ல முடியாமல் தவித் தனர். இதனையறிந்த அப்பகுதி பொது மக்கள் மற்றும் பெற்றோர்கள் பள்ளிக்கு  வந்து பள்ளியில் மழைக்காலங்களில் ஏற்படும் பிரச்சனைகளை எதிர் கொள்ள நடவடிக்கையும் மேற்கொள் ளாத பள்ளி நிர்வாகத்தை கண்டிது தனர். மேலும், தாரமங்கலம், தொளசமு பட்டி பிரதான சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார்  ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிகு கப்பட்டது. அதனை தொடர்ந்து சம்பவ  இடத்திற்கு வந்த தாரமங்கலம் காவலு துறையினர் மறியலில் ஈடுபட்டவர் களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்து, மழை நீரை வெளியேற்ற நடவ டிக்கை மேற்கொண்டனர். பள்ளி வளா கத்திற்குள் மழை நீர் சூழ்ந்த நிலையில்,  பெரும்பாலான மாணவர்கள் வீட்டிற்கு  சென்றனர். ஆசிரியர்கள் மட்டும் பணி யில் இருந்தனர்.