சேலம், பிப். 28- நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்விகளுக்கு உரிய பதில்களை ரயில்வே அதிகாரிகள் வழங்க வேண் டும். கடமைக்காக கூட்டத்தை நடத் தக்கூடாது என ரயில்வே அதிகா ரிகள் மீது சேலம் கோட்டத்திற்குட் பட்ட எம்பி.,க்கள் விமர்சனத்தை முன் வைத்தனர். சேலம் ரயில்வே கோட்ட ஆலோ சனை குழு கூட்டம் ரயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ் குமார் சிங்கா தலை மையில் நடைபெற்றது. கூட்டத்தில் சேலம் கோட்டத்திற்கு உட்பட்ட சேலம் கோவை, நாமக்கல், தரும புரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட் டங்களை சேர்ந்த நாடாளுமன்ற மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பங்கேற்று, நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி. சின்ராஜ் பேசுகையில், ரயில்வே ஆலோசனைக் கூட்டம் சம் பிரதாயத்திற்கு நடப்பதாக தெரிகி றது. ரயில்வே கட்டுமானப் பணிகள் தரம் இல்லாத பணிகளாக நடைபெ றுகிறது. குறிப்பாக சேலம் மாவட்டத் தில் வைகுண்டம், கொங்கணாபுரம் ஆகிய பகுதிகளில் தற்போது கட்டப் பட்ட தரைப்பாலம், மிகுந்த சேத மாக உள்ளது. இது சம்பந்தமாக அதி காரிகள் விசாரணை நடத்தி, அந்த ரயில்வே பணிகளை கண்காணித்த ரயில்வே அதிகாரியிடம் உரிய விசா ரணை நடத்த வேண்டும். மக்களின் பிரச்சினைகளை அறிந்து அவர்க ளுக்கு தரமான பணிகளை ரயில்வே நிர்வாகம் வழங்க வேண்டும். நாமக் கல் மாவட்டத்தில் ரயில்கள் நின்று செல்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்றார். தருமபுரி எம்.பி., டாக்டர் .எஸ். செந்தில்குமார் பேசுகையில், தரும புரி மாவட்டத்தில் மொரப்பூர் உள் ளிட்ட சில முக்கிய ரயில் நிலையங்க ளில் ரயில்கள் நின்று செல்வதை உத் தரவாதப்படுத்த வேண்டும். நாடாளு மன்ற உறுப்பினர்களின் கேள்விக ளுக்கு உரிய முறையில் ரயில்வே அதிகாரிகள் பதில் அளிக்க வேண் டும். ரயில்வே துறைக்கு சொந்தமான நிலங்களை உரிய முறையில் பயன் படுத்த வேண்டும். தேவைக்கேற்ற இடம் இருந்தால் மற்றவர்களுக்கு வழங்க டி.எல்.டி.ஏ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். கிருஷ்ணகிரி எம்.பி., டாக்டர் எ.செல்லகுமார் பேசுகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல பகு திகளில் ரயில்வே பணிகள் முழுமை பெறாத சூழல் உள்ளது. அதிகாரி கள் உடனடியாக ஆய்வுக்கு உட் படுத்தி, பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். ரயில்வே உயர் அதிகாரி கள், அரசியல்வாதிகளை போல செயல்படாமல், மக்களுக்கு சேவை மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டும் .
ரயில்வே நிகழ்ச்சிகளில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பி னர்கள் மற்றும் முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினர்களுக்கு உரிய முக்கியத்துவத்தை வழங்க வேண் டும் என்றார். மாநிலங்களவை உறுப் பினர் சந்திரசேகர் பேசுகையில், நாடா ளுமன்ற உறுப்பினர்களுக்கு, சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் உரிய மதிப்பு அளிப்பதில்லை. கடந்த 2022 ஆம் ஆண்டு அமைச்சரிடம் வழங் கிய மனுவிற்கு இதுவரை அதிகாரி கள் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. நாடாளுமன்ற உறுப்பி னர்களின் கோரிக்கைகள் மீது, சேலம் கோட்ட அதிகாரிகள் முதலில் உரிய பரிசீலனை செய்ய வேண்டும். பின்னர், அதுகுறித்து மேல் உள்ள ரயில்வே நிர்வா கத்திடம் தெரிவித்து, பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். ஈரோட்டில் இருந்து சென்னை வரை இயக்கப்படும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில் முதல் வகுப்பு ஏசி பெட்டிகள் இணைக்கப்பட வேண்டும். எக்ஸ்பிரஸ் வண்டி மிக வும் மோசமான பராமரிப்புடன் இயங்கி வருகிறது. உடனடியாக அதனை சரி செய்து பாதுகாப்புடன் மக்களுக்கு இயக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். கோவை நாடாளுமன்ற உறுப்பி னர் பி.ஆர்.நடராஜன் உள்ளிட்டு அடுத்தடுத்த சேலம் கோட்டத்திற் குட்பட்ட எம்பிக்கள் எழுப்பிய கேள் விகளுக்கு பதில் சொல்ல முடியா மல் ரயில்வே அதிகாரிகள் திணறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.