districts

img

தோடர் இன மக்களுடன் நடனமாடிய ராகுல் காந்தி

உதகை, ஆக.12- தில்லியில் இருந்து வய நாடு செல்லும் வழியில் ஊட்டிக்கு வந்த ராகுல் காந்தி தோடர் இன மக்க ளுடன் நடனமாடி மகிழ்ச்சி அடைந்தார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் முடிந்த பின் தனது தொகுதியான வயநாட்டிற்கு சென்றார். முன்னதாக, சனியன்று நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வந்தார். தில்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு கோவை விமான  நிலையம் வந்தார். அங்கு கட்சியினர் சார்பில்  அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது. இதைத்தொடர்ந்து கோவை விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் கிளம்பிய ராகுல் காந்தி, நீலகிரி மாவட்ட எல்லையான குஞ்சப்பனை கிராமத்தில் பழங்குடியினர் நடத்தி வரும் தேநீர் கடை யில் டீ குடித்த பின் பயணத்தை துவங்கினார்.  பின்னர், அங்கிருந்து புறப்பட்டு கோத்தகிரி வழியாக ஊட்டிக்கு சென்றார்.

அங்கு எல்ல நல்லி பகுதியில் உள்ள தனியார் உணவ கத்தில், முன்னாள் விண்வெளி வீரர் ராகேஷ் சர்மாவுடன் பேசினார். இதன் பின்னர் அங்கு காட்சிக்கு வைக்கப் பட்டிருந்த சாக்லேட்டுகளை பார்வையிட் டார். மேலும் சாக்லேட் தயாரிப்பு முறை குறித்து கேட்டு தெரிந்து கொண்டார். மதிய உணவுக்குப் பிறகு தோடர் பழங்குடியின கிராமமான முத்தநாடுமந்து கிராமத்திற்கு ராகுல் காந்தி வந்தார். அவருக்கு தோடர் பழங்குடியின மக்களின் பிரத்தியேகமான பூத்துக்குளி சால்வை வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன் பின்னர் தோடர் இன மக்களின் முன்போ, அடையாள்வோ கோவில்களுக்கு சென்றார். அப்போது கோயில் வழிபாட்டு முறை குறித்து கிராம  மக்கள் ராகுல் காந்திக்கு விளக்கம் அளித் தனர். அப்போது தீ குச்சி இல்லாமல் பாரம்பரிய  முறையில் மரக்கட்டைகள் மூலம் நெருப்பு  பற்ற வைப்பது குறித்து ராகுல் காந்திக்கு பழங்குடியின மக்கள் விளக்கம் அளித்த னர். பின்னர் தோடர் இன மக்கள் தங்களது உடல் திறமையை வெளிக்காட்டும் வகை யில், இளவட்ட கல்லை தூக்கி காட்டியதை ராகுல் காந்தி பார்த்து கைதட்டி உற்சாகப் படுத்தினார். இதையடுத்து அங்கிருந்த பழங் குடியின மக்களுடன் நடனமாடி உற்சாகம டைந்தார். பின்னர் கார் மூலம் கிளம்பிய ராகுல்  காந்தி கூடலூர் வழியாக வயநாடு சென் றார்.  கோவையில் இருந்து கூடலூர் வரையி லான பயணத்தில் ஏராளமானோர் ஆங் காங்கே வரவேற்பளித்து ராகுல் காந்தியை நெகிழ்ச்சியடையச்செய்தனர்.