districts

முள்ளங்கி வரத்து குறைவால் விலை உயர்வு

தருமபுரி, செப்.21- தருமபுரி மாவட்டத்தில் முள்ளங்கி வரத்து குறைவால் விலை உயர்ந்துள்ளது. இதனால், முள்ளங்கி பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, காரி மங்கலம், பாலக்கோடு, பென்னாகரம், நல்லம்பள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி உள் ளிட்ட பகுதிகளில் சுமார் 400 ஏக்கர் பரப்ப ளவில் முள்ளங்கி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. 40 நாட்களில் அறுவடைக்கு வருவ தால் பெரும்பாலான விவசாயிகள் முள்ளங்கி  சாகுபடி செய்து விற்பனை செய்கின்றனர்.  இந்நிலையில், தருமபுரி மாவட்டத்தில் பரவலாக சாகுபடி செய்யப்பட்டுள்ள முள்ளங்கி அமோக விளைச்சல் அடைந் துள்ளது. தற்பொழுது மாவட்டத்தில் மாரண்ட ஹள்ளி, காரிமங்கலம் உள்ளிட்ட பகுதி களில் விவசாயிகள் முள்ளங்கி அறுவடை செய்து விற்பனை செய்து வருகின்றனர். கடந்த மாதம் முள்ளங்கி வரத்து அதிகரித்த தால், விலை குறைந்து கிலோ ரூ.8-க்கு விற்ப னையானது.  மேலும் விவசாய நிலங்களுக்கு நேரடி யாக வந்து கொள்முதல் செய்யும் வியா பாரிகள் ரூ.3 முதல் 4 ரூபாய் வரை அடிமட்ட  விலைக்கே வாங்கிச் சென்றனர். இதனால்  அறுவடை செய்யும் கூலி கூட கிடைக் காமல் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்குள் ளாகினர். விலை குறைவால் விவசாயிகள் மாற்றுப் பயிர்களான கத்தரி வெண்டை தக்காளி உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய் துள்ளதால் முள்ளங்கி சாகுபடி மாவட்டத்தில்  வெகுவாக குறைந்துள்ளது. தற்போது தருமபுரி மாவட்டத்தில் முள்ளங்கி விளைச்சல் குறைந்து இருப்ப தால் விவசாயிகள் அவற்றை உள்ளூர் சந்தைக்கு அனுப்பாமல் அண்டை மாநில மான கேரளா மற்றும் கர்நாடகா பகுதிகளுக்கு  அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுவதால் முள்ளங்கியின் விலை உள்ளூர் சந்தையில்  அதிகரித்துள்ளது. கடந்த மூன்று மாதங் களுக்கு பிறகு ஒரு கிலோ 4 ரூபாயிக்கு விற்ற  முள்ளங்கி தற்போது கிலோ ரூ.25 முதல்  ரூ.30 வரை ஏற்றம் கண்டுள்ளது. மூன்று மாதங் களுக்கு பிறகு முள்ளங்கி விலை உயர்ந்துள் ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந் துள்ளனர்.