districts

எஸ்.சி. விடுதிகளில் அசைவ உணவு நிறுத்தம்: கேள்விக்குறியாகும் மாணவர்களின் ஊட்டச்சத்து

புதுச்சேரி, நவ.27- புதுச்சேரி ஆதிதிராவிடர் விடுதிகளில் பயி லும் மாணவர்களுக்கு ஊட்டச்சத்துடன் கூடிய உணவு வழங்க வேண்டும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது. ஆதிதிராவிட மாணவ, மாணவிகளுக் காக புதுச்சேரியில் 16, காரைக்காலில் 10, ஏனா மில் 2 என மொத்தம் 28 விடுதிகள் உள்ளன. ஏழ்மை நிலையிலுள்ள ஆதிதிராவிட மாண வர்கள் இந்த விடுதிகளில் தங்கி கல்வி பயில்கின்றனர். ஆனால், விடுதிகளுக்காக ஒதுக்கப்படும் நிதி முறையாக செலவிடப் படாததால், அவை மோசமாக இயங்கி வருவ தாக மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். விடுதியில் வழங்கப்பட்டு வந்த அசைவ உண வுகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், முட்டை கூட வழங்கப்படுவதில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கிருஷ்ணா நகரில் உள்ள மாணவிகளுக் கான விடுதியில் இருந்து 2 கி.மீ. தூரத்தில் பேருந்து நிலையம் உள்ளதால் அவர்களுக்கு வழங்குவதற்காக நூற்றுக்கணக்கில் சைக் கிள்கள் அரசு சார்பில் வாங்கப்பட்டுள்ளன. எனினும், இதுவரை யாருக்கும் சைக்கிள் வழங்கப்படவில்லை என்றும், பூட்டி வைக்கப் பட்ட சைக்கிள்கள் வீணாகி வருவதாகவும் மாணவிகள் வேதனை தெரிவிக்கின்றனர். தாகூர் கலைக்கல்லூரி அருகே உள்ள விடுதி பழுதடைந்ததை அடுத்து அதனை சீரமைக்க 40 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், எனினும் பணிகள் தொடங்கப்படாததால் கொசப்பாளையம் வரை வந்து செல்ல வேண்டிய நிலையில் மாணவர்கள் உள்ளதா கவும் கூறப்படுகிறது. தட்டாஞ்சாவடியில் உள்ள விடுதியில் கட்டிடம் விரிசல் அடைந் துள்ளதாக அதிகாரிகளிடம் மாணவர்கள் தரப்பில் பலமுறை தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து தீண்டாமை ஒழிப்பு முன் னணியின் செயலாளர் இரா.சரவணன் கூறு கையில், புதுச்சேரி மாநிலத்தில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை அனைத்து மாணவர்களுக்கும் எந்த தனி யார் நிறுவனத்தில் பிடித்தாலும் அதற்கான முழு செலவை அரசே ஏற்கும் என்று என்.ஆர் காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசு கூறுகிறது. ஆனால், ஏழை ஆதிதிராவிட மாணவர்கள் மீது ஒரு துளி கூட அக்கறை இல்லாத அர சாகத்தான் உள்ளது. புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் ஆதிதிராவிடர் மாணவர் களுக்கான தங்கும் விடுதிகளில் கடந்த மூன்று ஆண்டுகளாக அசைவ உணவு நிறுத்தப்பட் டுள்ளது. இதற்கு முன்பு திங்கட்கிழமைகளில் முட்டையும், புதன்கிழமை ஆட்டுக்கறியும், வியாழக்கிழமை மீனும், சனிக்கிழமை கோழிக்கறியும் மாணவர்களுக்கு வழங்கப் படுவது வழக்கமாக இருந்தது. ஆனால் கடந்த மூன்று ஆண்டு காலமாக ஒரு முட்டை கூட வழங்கப்படுவதில்லை.

நம் நாட்டில் குழந்தைகள் மற்றும் வளர் இளம் பெண்களிடையே (11 முதல் 19 வயது  வரை) 60 விழுக்காட்டிற்கும் மேற்பட்டோர்  ரத்தச் சோகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள னர். 80 விழுக்காடு தாய்மார்களும், பெண் களும் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ள னர். 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் ஐந் தில் 3 பேர் ரத்தச் சோகையுடனே வளர்கின்ற னர் என்று புள்ளிவிவரம் கூறுகிறது. இப்படிப் பட்ட நிலையில் விடுதியில் தங்கும் ஏழை ஆதி திராவிட மாணவ, மாணவிகளுக்கு வழங்கப் படும் அசைவ உணவு, அரசு நிறுவனம் மூலம் வழங்கப்பட்டு வந்தது. அதில் எந்த முறை கேடும் நடைபெறாத நிலையில், தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அதில் முறை யீடு புகார் எழுந்தது. இதனால், யாரிடம் டெண் டர் விடுவது என்பதில்தான் பிரச்சனை உள் ளது என்று மாநில நிர்வாகம் கூறியுள்ளது. மாணவர்கள் தங்கும் விடுதிகளில் கழிவறை கள் மோசமான நிலையில் உள்ளன. பல இடங்களில் தாழ்ப்பாள் கிடையாது. கடந்த மூன்று ஆண்டு காலமாக அனைத்து மாணவர் களுக்கும் வழங்கப்பட வேண்டிய இலவச பாய், தலையணை வழங்கப்படவில்லை. மேற்கூறிய கோரிக்கைகளை வலியு றுத்தி தட்டாஞ்சாவடி ஆதிதிராவிடர் நலத் துறை முன்பு நவ.29 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம் என்றும் சரவணன் கூறி னார்.