districts

ஊட்டி தாவரவியல் பூங்கா மரங்களில் கியூஆர் கோடு வசதி

உதகை, ஜூலை 13- ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா வில் உள்ள மரங்களை பற்றி அறிந்து கொள்ள மரங்களில் புதிதாக கியூஆர் கோடு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், ஊட்டி அரசு தாவரவியல் பூங்க 1848 ஆம் ஆண்டு  தொடங்கப்பட்டு 1867 ஆம் ஆண்டு முடிக்கப்பட்டது. இந்த பூங்காவில் ஐரோப்பிய நாடுகளின் காலநிலை ஊட்டியில் நிலவியதால் ஐரோப் பிய நாடுகளில் காணப்பட்ட மரங் கள் மற்றும் மூலிகை செடிகள்  அதிக அளவில் கொண்டு வரப்பட்டு பூங்கா முழுவதும் நடவு செய்யப்பட்டது. இந்த மரங்கள் மற்றும் மூலிகை செடிகள் தற்போது வரை சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகின்றன. நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற் றுலா பயணிகள் ஊட்டி அரசு தாவர வியல் பூங்காவுக்கு வந்து செல்வார் கள். இதன்படி வார நாட்களில் தின சரி சுமார் 8 ஆயிரம் பேரும், வார  இறுதி நாட்களில் 15 ஆயிரம் பேரும் வந்து செல்கின்றனர். இந்நிலையில், தாவரவியல் பூங் காவில் உள்ள பழமை வாய்ந்த மற் றும் அரிய வகை மரங்கள் தாவரங் கள் குறித்து சுற்றுலா பயணிகள் தெரிந்து கொள்ளும் வகையில் புதிய வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. தாவரங்கள் குறித்த தகவல் களை கியூஆர்கோடு முறையில் பதிவு செய்து அவற்றை செல்போன் மூலம் ஸ்கேன் செய்தால் சுற்றுலா பயணிகள் அறிந்து கொள்ளும் வகை யில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது.  தற்போது பூங்கா வரும் சுற்றுலா பயணிகள் அவற்றை செல்போன் மூலம் ஸ்கேன் செய்து தகவல்களை படித்து தெரிந்து கொள்கின்றனர். இதுகுறித்து தாவரவியல் பூங்கா உதவி இயக்குனர் பாலசங்கர் கூறு கையில், அரசு தாவரவியல் பூங்கா  பராமரிப்பு நிதி ரூ.2¼ லட்சம் மதிப் பில் பூங்காவில் ஆயிரம் தாவரங்க ளின் பெயர்கள், அந்த தாவரங்களின் பூர்வீகம், தாவரத்தின் பலன்கள் உள் ளிட்ட தகவல்கள் பதிவு செய்யப் பட்டு உள்ளன. பல்வேறு மாநிலங் களில் இருந்தும் சுற்றுலா பயணி கள் வருவதால் அவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதால் தமிழ் மட்டுமல்லாமல் ஆங்கிலத்திலும் இந்த தகவல் இடம்பெற்றுள்ளது.  பூங்காவில் உள்ள ஜப்பான் ரோஸ் என்று அழைக்கப்படும் கமாலியா, டிராகன் ட்ரீஸ் எனப்படும் முட்டைக் கோஸ் மரம், மங்கி பசில் டீரி எனப் படும் குரங்கேரா மரம், ருத்ராட்சை மரங்களில் இவை பொருத்தப்பட்டு உள்ளன. முதல் கட்டமாக 100 மரங்களுக்கு பொருத்தப்பட்டுள்ளது. மொத்தம் 1000 மரங்களுக்கு பொருத்த திட்ட மிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை பொருத்தவரை கோவை வேளாண்  பல்கலைக்கழகத்தில் இந்த திட்டம் நடைமுறையில் உள்ளது. நீலகிரி யில் முதல் முறையாக தாவரவி யல் பூங்காவில் கொண்டு வரப்பட் டுள்ளது. சுற்றுலா பயணிகளுக்கு மட் டுமல்ல தாவரவியல் சார்ந்த படிப்பு கள் உள்ள மாணவர்களுக்கும் இது பயன்படும் நீலகிரி மாவட்டத்தில் மற்ற பூங்காக்களிலும் இதை கொண்டு வர உள்ளோம், என்றார்.