திருப்பூர், மே 21 - ஒரு வார காலத்திற்கு முகூர்த்த நாட் கள் இருப்பதால், தொழிலாளர்கள் விடுப்பு எடுக்கக் கூடாது என நிர்வாகம் சட்டவிரோத சுற்றறிக்கை வெளியிட்டுள்ள தற்கு அரசு போக்குவரத்து ஊழியர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அரசு போக்குவரத்து கழகத்தில் காலி பணியிடங்களை நிரப்பாமல், நெருக்கடியின் சுமைகளை தொழிலாளர்கள் மீது திணிப்ப தாக நிர்வாகத்தின் மீது குற்றஞ்சாட்டியுள் ளனர். அரசு போக்குவரத்து கழக நிர்வா கத்தில் அனைத்து கிளைகளிலும் சுற்றறிக் கைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் மே 21 முதல் 27 ஆம் தேதி வரையில் அதிக அளவு முகூர்த்தம், கோயில் விசேஷங்கள், இதர சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அன்றைய தினங்களில் அதிக பயணிகள் பயணம் செய்வார்கள். எனவே, வழித்தட பேருந்துகளும், சிறப்பு பேருந்துகளும் இயக் குவதற்காக தொழிலாளர்கள் எவ்வித விடுப்புகளையும் தவிர்க்க வேண்டும் என நிர்வாகம் சுற்றறிக்கை சட்ட விரோதமாக வெளியிட்டுள்ளது. நிர்வாகம் சொல்லுகிற மாதிரி தொழிலா ளர்கள் எவ்வித சுப காரியங்களிலும் ஈடுபடக் கூடாது. பள்ளி, கல்லூரிகள் திறப்பதால் தொழிலாளர்களின் குழந்தைகளை பள்ளி, கல்லூரியில் சேர்ப்பதற்கு கூட விடுப்பு மறுக்கும் மிக மோசமான நிலையில் போக்கு வரத்து கழக நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. கடந்த 8 ஆண்டு காலமாக போக்கு வரத்து கழகத்தில் எவ்வித பணி நியம னமும் செய்யப்படாத நிலையில், சுமார் 20 ஆயிரம் தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளது. இந்நிலையில், அனைத்து பேருந்து களையும் இயக்கி, சிறப்பு பேருந்துகளை யும் இயக்க வேண்டும் என தொழிலாளி களை விடுப்பு, ஓய்வு எடுக்கவிடாமல் சித்திர வதை செய்வது தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழக நிர்வாகத்தின் வாடிக்கையாக போய்விட்டது. மக்களுக்கான சேவையில் அரசு போக்கு வரத்துக் கழகம் ஈடுபட்டுள்ள நிலையில், போக்குவரத்து கழகத்தில் உள்ள காலிப் பணி யிடங்களை முழுமையாக நிரப்பினால் மட்டுமே இப்பிரச்சனைக்கு விடிவு காண முடியும் என்று தொழிலாளர்கள் தெரிவித் தனர்.