திருப்பூர், மார்ச் 22- புதர் மண்டி கிடக்கும் ஆத்துப்பா ளையம் நாகர்சாமி கோவில் சுத்தப்ப டுத்தி தர வேண்டும் என வாலிபர் சங்கத் தினர் கோரிக்கை வைத்ததையடுத்து கோவில் சுத்தம் செய்யப்பட்டது. இதுகுறித்து வாலிபர் சங்க திருப்பூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் சந்தோஷ் குமார் கூறியதாவது, இவ்வார இறுதி யில் பெருமாநல்லூர் கொண்டத்து காளி யம்மன் கோவில் திருவிழா வர உள்ளது. இக்கோவில் புகழ் பெற்ற கோவில் என்ப தால், அருகாமையில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக் கானோர் வருவார்கள். அதேபோல திருப்பூர் மாவட்டத்திலும் உள்ள கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடத் துவது வழக்கம். இந்நிலையில், கொண் டத்து காளியம்மன் கோவில் திருவிழா விற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் ஆத்துப்பாளையம் நாகர் சாமி கோவில் புதர் மண்டி காணப்பட் டது. இந்து அறநிலை துறைக்கு தொடர் பில்லாத கோவில் என்பதால், இதை மாநகராட்சி நிர்வாகம் சுத்தம் செய்து தர வேண்டும் எனப் பொது மக்கள் சார்பில் எங்கள் அமைப்பினர் மாநகராட்சி கவுன்சிலர் உட்பட மண்டல அலுவலகத்திலும் கோரிக்கை வைத் தோம். இதையடுத்து, மாநகராட்சி நிர் வாகம் சார்பில் கோவில் சுத்தம் செய்து தரப்பட்டது..