districts

img

காபி கொட்டையை வாரியம் மூலம் கொள்முதல் செய்க

சேலம், ஜூலை 18- காபி கொட்டையை வாரியம் மூலம்  விவசாயிகளிடம் கொள்முதல் செய்ய  நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலி யுறுத்தி செவ்வாயன்று சேலம் மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு காபி விவசாயிகள் சங்கம் சார்பில் மனு  அளிக்கப்பட்டது. தமிழ்நாடு காபி விவசாயிகள் சங்கம்  சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில், சங்கத்தின் பொருளாளர் டி. தர்மலிங்கம் தலைமையில் கோரிக்கை  மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது,  கடந்த 1994ஆம் ஆண்டு வரை காபி  வாரிய நிர்வாகம், விவசாயிகளிட மிருந்து காபி கொட்டைகளை நேரடி யாக கொள்முதல் செய்து வந்தது. தற் போது அந்த நடைமுறையில் இல்லை.  இதனால் காபி பயிரிடும் விவசாயி களுக்கு பெரிய அளவில் நட்டம் ஏற்படு கிறது.   மேலும். காபி வாரியம் மூலம் விவ சாயிகளிடம் காப்பியை கொள்முதல் செய்திட ஒன்றிய அரசு, இந்திய காப்பி  சட்டம் 1942-ல் திருத்தம் செய்திட வேண்டும். காபி நிறுவனங்கள், நுகர் வோருக்கு விற்பனை செய்திடும் காபித் தூள் இன்ஸ்டன்ட் காப்பி விலையில் 25சதவிகிதம் காபி விவசாயிகளுக்கு சென்றடையும் வகையில் விலை நிர் ணயம் செய்திட வேண்டும். நிலப்பட்டா இல்லாத விவசாயி களுக்கு மானியங்கள் காபி வாரியம் வழங்கிட வேண்டும். அனைவருக்கும் மானியங்களை வழங்கிட நடவடிக்கை  எடுக்க வேண்டும். மாநில அரசு, ஒரு  கிலோ காபிக்கு கேரளா அரசு வழங்கு வதைப் போல ரூ.10 ஊக்கத்தொகை வழங்கிட வேண்டும். வனவிலங்கு களால் சேதமடையும் காபி தோட்டங் களுக்கு வனத்துறை மூலம் கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டுமென மனு தெரிவித்திருந்தனர். மனு அளிக்கும் இயக்கத்தில், அகில  இந்திய காபி விவசாயிகள் கூட்டமைப் பின், அகில இந்திய துணைத் தலைவர்  டி.ரவீந்திரன், ஏற்காடு அண்ணாமலை ஆகியோர் உடனிருந்தனர்.