districts

img

நீர்த்தேக்க தொட்டியில் நாய்க்குட்டி

சேலம், பிப் 22- நீர்த்தேக்க தொட்டியில் நாய்க்குட்டி ஒன்று இறந்து கிடந்த  சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.  சேலம் மாவட்டம் தாரமங்கலத்தை அடுத்துள்ளது துட்டம் பட்டி ஊராட்சி. இந்த ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் ஆட்டை யான் வளவு கிராமம் உள்ளது. இந்த பகுதியில் மிகப்பெ ரிய நீர் தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.இந்த நீர்த் தேக்க தொட்டியில் இருந்து சுற்றுவட்டார அனைத்து கிரா மங்களுக்கும் குடிநீர் செல்கிறது.  இந்நிலையில், வியாழனன்று வழக்கம்போல் நீர் தேக்க  தொட்டியின் மீது ஆபரேட்டர் அம்மாசி என்பவர் மேலே  ஏறி தண்ணீர் இருப்பு குறித்து பார்த்துள்ளார். அப்போது நீர்த்தேக்க தொட்டியின் உள்ளே குட்டி நாய் ஒன்று இறந்த நிலையில் மிதந்து கொண்டிருந்தது. இதனைக்கண்டு இவர்  அதிர்ச்சியடைந்து அருகில் இருந்த மக்களிடம் தெரி வித்தார்.  இத்தகவல் அறிந்து கிராம மக்கள் தண்ணீர் தொட்டி அருகே நாய் தெரியாமல் சென்று தொட்டியில் விழுந் ததா அல்லது யாராவது திட்டமிட்டு தண்ணீர் தொட்டிக் குள் வீசினார்களா? என்கிற சந்தேகத்தை எழுப்பினர். இதுகு றித்து தகவல் அறிந்து, தாரமங்கலம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து நீர்த்தேக்க தொட்டியை பார்வை யிட்டு விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவம் அப்பகு தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.