districts

img

மேளம் அடிக்க மறுத்ததால் பட்டியலின மக்கள் மீது தாக்குதல்

கோவை, மார்ச் 29- விநாயகர் சதுர்த்திக்கு மேளம் அடிக்க  மறுத்த பட்டியலின மக்கள் மீது சாதி ஆதிக் கத்தோடு தாக்குதல் நடத்திய வழக்கில், குற்ற வாளிகள் 8 பேருக்கு தண்டனை விதித்து  கோவை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள் ளது. கோவை மாவட்டம், பெரியதடாகம் பகுதி யில் பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதியினர் ஒவ் வொரு வருடமும் விநாயகர் சதுர்த்தியின் போது, அப்பகுதியைச் சார்ந்த பட்டியலின மக் களை துடுமம் அடிக்க அழைப்பார்கள். அவ் வாறு பட்டியலின மக்கள் செல்லும்போது, அவர்கள் இழிவாக நடத்தப்படுவார்கள். கடந்த 2016 ஆண்டு செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி ஆதிக்க சாதியினர் பட்டிய லின மக்களை துடுமம் அடிக்க அழைத்துள் ளனர். இதற்கு, அங்கு சென்றால் தாங்கள்  இழிவாக நடத்தப்படுவதால், துடுமம் அடிக்க பட்டியலின மக்கள் மறுத்தனர். இதனால், ஆத்திரமடைந்த சாதி ஆதிக்கவாதிகள் கும் பலாகச் சென்று பட்டியலின மக்கள் குடியி ருப்புக்கு சென்று, சாதிப்பெயரினைச் சொல்லி  இழிவுபடுத்தி மரத்தடிகள், இரும்புத்தடிக ளால் கொண்டு தாக்குதல் நடத்தினர். இச்சம்ப வம் அச்சமயத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்ப டுத்தியது. இதனையடுத்து, மார்க்சிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் முற் போக்கு அமைப்புகள் கடும் கண்டனம் தெரி வித்தனர். மேலும், சம்பந்தப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தும், நியாயம் பெற்றுத்தர உங்களோடு இருப்போம் என்கிற உறுதிய ளித்தனர். இதனையடுத்து, இச்சம்பவத்தில், சாதி ஆதிக்கவாதிகள் 22 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் துடியலூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. Cr.No. 697/2016 வழக்கு பதியப்பட்டு புலன் விசாரனை நடத்தப்பட்டு, கோயமுத்தூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இந்திய சட்டப்பிரிவுகள் 143, 147, 148, 341,   323, 324, 307, 506 (i) மற்றும் ( SC/ST (POA) Act Amendment Act 2015) வன்கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவுகள் 3(1)(r ) (s), 3(2) (v) (v-a) ஆகியவற்றின் கீழ் குற்றப்பத்தி ரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக் கில், அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத் தின் தேசியக்குழு உறுப்பினரும், மூத்த வழக் கறிஞருமான எம்.ஆனந்தனை தமிழ்நாடு அரசு, சிறப்பு அரசு வழக்கறிஞராக நியமித்தது.  8 பேருக்கு தண்டனை கடந்த 8 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், வியாழனன்று தீர்ப்பு வழங் கப்பட்டது. இதில், குற்றம்சாட்டப்பட்ட 22  நபர்களில் 8 நபர்களுக்கு தண்டனை அளித் தும் மீதமுள்ளவர்களை விடுதலை செய்தும்  நீதிபதி நந்தினி தீர்ப்பு அளித்தார். இதில் என். பிரகாஷ் (42), எஸ்.குணசேகரன் (41), என். சுந்தரசாமி (43) ஆகியோருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதத் தொகையும் ஆர்.கருப்புசாமி (37), பி.மதன் என்கிற மதன் குமார் (27), எஸ்.கார்த்திக் என்கிற கார்த்திக்  குமார் (39), எம்.தினேஷ்குமார் (39), பல்லு செல்வம் என்கிற செல்வராஜ் (47) ஆகியோ ருக்கு தலா ரூ.500 அபராதத் தொகையும் தண்டனையாக விதிக்கப்பட்டது. வன்கொ டுமை வழக்கில் 8 நபர்களுக்கு தண்டனை அளிக்கப்பட்ட தீர்ப்பினை கேட்டு பாதிக்கப் பட்ட மக்கள் தங்களுக்கு நீதி கிடைத்தது என மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இவ்வழக் கில் திறம்பட வாதித்து நீதியை நிலைநாட்டிய சிறப்பு அரசு வழக்கறிஞர் எம்.ஆனந்தனுக்கு பாதிக்கப்பட்ட மக்களும், வழக்கறிஞர்க ளும், சமூகநீதி ஆர்வலர்களும் வாழ்த்து தெரி வித்தனர்.