சேலம், மார்ச் 13- ஆதிக்கசாதியினரின் மிரட் டலுக்கு அடிபணிந்து அதிகா ரிகள் மின் இணைப்பு வழங்கா மல் இழுத்தடிப்பதாக பழங் குடியினத்தை சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர். சேலம் மாவட்டம், வாழப் பாடி அருகே உள்ள வடக்கு காடு ஏகே நகரில் ஆதிதிராவிடர், பழங் குடியின சமூகத்தை கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட குடும்பத்தினர் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது, வடக்கு காடு ஏ.கே.நகரில் புதிதாக இடம் வாங்கி அங்கு 5 வருடத்திற்கு முன்பு புதிய வீடு ஒன்றை கட்டியதாகவும் அந்த வீட்டிற்கு மின் இணைப்பு கேட்டு பலமுறை அதிகாரிக ளிடம் மனு கொடுத்தும் இதுவரை மின் இணைப்பு கொடுக்கப்படவில்லை. மின் இணைப்பு கொடுக்க ஊழியர்கள் வரும் போது அதேபகுதியைச் சேர்ந்த வேறு சமூகத் தினர், ஊழியர்களை மிரட்டி அனுப்பி விடு கின்றனர். இதனால், பெரும் அவதிக்குள்ளா வதாக தெரிவித்தனர். மேலும், தாங்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக அருகில் உள்ள உயர் சாதியினர் தங்களை அங்கு வாழ விடாமல் செய்கின்றனர். உயர் படிப்பு முடித்து தற்போது போட்டித் தேர்வுக்கு தயா ராகி வரும் தங்களுக்கு மின் இணைப்பு இல் லாதது பெரும் குறையாக உள்ளது. இரவு நேரத்தில், விஷ ஜந்துக்கள் பிரச்சனை மற் றும் இருட்டில் வயதான தாய் தந்தையரை பரா மரிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலை யிட்டு உடனடியாக தங்கள் வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என தெரிவித் துள்ளனர்.