districts

img

வேளாண் பல்கலைக்கழக அமைச்சுப் பணியாளர் சங்க வெள்ளிவிழா சிறப்பிதழ் வெளியீடு

கோவை, ஜன.22- வேளாண் பல்கலைக்கழக அமைச் சுப் பணியாளர் சங்கத்தின் வெள்ளி விழா சிறப்பிதழை சனியன்று கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நட ராஜன் வெளியிட்டார். கோவை வேளாண் பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள பொன் விழா  அரங்கில் தமிழ்நாடு வேளாண் பல் லைக்கழக அமைச்சுப் பணியாளர் களின் மாநில செயற்குழு கூட்டம்  சனியன்று நடைபெற்றது. மாநிலத் தலைவர் இரா.பன்னீர்செல்வம்  தலைமையில் நடைபெற்ற  இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் முத்துக்குமார் வரவேற்புரையாற்றி னார். முன்னதாக அமைச்சுப் பணி யாளர்களின் வெள்ளிவிழா சிறப்பி தழ் தொகுப்பு வெளியீட்டு விழா நடைபெற்றது. இதனை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வெளியிட்டார். இதனை அமைச்சுப் பணியாளர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் பொன் வேலு பெற் றுக்கொண்டார். வெள்ளிவிழா இதழ் குறித்த அறிமுக உரையை இத ழின் ஆசிரியர் விஸ்வநாதன் அறிமுகப் படுத்தினார்.  இந்நிகழ்வை வாழ்த்தி சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் கா. கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சி.எஸ்.பால்ராஜ், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தின் பொதுச் செயலாளர் ஆர்.மாணிக் கவாசகம், உள்ளிட்டோர் உரையாற்றி னர். இதனைத்தொடர்ந்து நடைபெற்ற  செயற்குழு கூட்டத்தில், சங்கத்தின்  பொதுச்செயலாளர் கி.முத்துக்குமார், பொருளாளர் ரேணுகாதேவி உள் ளிட்ட திரளான நிர்வாகிகள் பங்கேற்ற னர்.