தருமபுரி, செப்.10- தருமபுரி புத்தகத் திருவிழாவில் நூல்கள் வெளியீடு மற்றும் நூல்கள் அறிமுக விழாக்கள் நடைபெற்றன. தருமபுரி வள்ளலார் திடலில் புத்த கத் திருவிழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் கல்லூரி மாணவர் நந்த குமார் எழுதிய “கூழாங்கல் வீடு” என்ற கவிதை நூல் மற்றும் இரா.சித்ரா எழு திய “சித்திரையில் நிறைமதி” என்ற கவிதை நூல், அரிமா அரங்க முருகே சன் எழுதிய “சுவாசம் தரும் படைப்பு கள்” என்ற கட்டுரை தொகுப்பு வெளியீடு நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொ டர்ந்து சகாப்தம் பதிப்பகத்தின் சார்பில் மறுமதிப்பு வெளியீடு நூலாக புலியூர் கேசிகன் எழுதிய “தகடூர் யாத்திரை” மற் றும் கி.வ.ஜகநாதன் எழுதிய “அதிய மான் நெடுமான் அஞ்சி” ஆகிய இரண்டு நூல்கள் அறிமுக விழா நடைப்பெற்றது. தமிழ் படைப்பாளர் பேரவையின் ஒருங் கிணைப்பாளர் வ.செ.குணசேகரன், தக டூர் புத்தகப் பேரவை தலைவர் இரா.சிசு பாலன் ஆகியோர் நூல்களை பெற்றுக் கொண்டனர். முன்னதாக, இவ்விழா விற்கு தமிழ் செம்மல் விருதாளர் பெரு முல்லையரசு தலைமை வகித்தார். காரி மங்கலம் பேரூராட்சி தலைவர் பி.சி.ஆர்.மனோகரன், தகடூர் புத்தகப் பேரவை செயலாளர் மரு.செந்தில் ஆகி யோர் நூல்களை வெளியீடு செய்து சிறப்புரையாற்றினர். இதில் நூலகர் சர வணன், எழுத்தாளர்கள் சிவம் முனு சாமி, சீதாலட்சுமி, சகாப்தம் பதிப்பகத் தின் ஒருங்கிணைப்பாளர் தேவி குணா உட்பட பலர் கலந்து கொண்டனர். முடி வில், மோகனப்பிரியன் நன்றி கூறி னார்.