கோவை, பிப்.11- கோவை எவரெஸ்ட் தொழிலாளர்களின் போராட்ட வரலாறைப் பேசும் “மிகை நாழி” நூலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் வெளியிட்டார். கோவை மாவட்டம், காந்திபுரம் பகுதி யில் உள்ள மலையாளி சமாஜம் அரங்கில், சனியன்று, கோவை எவரெஸ்ட் தொழிலா ளர்களின் போராட்டத்தை விவரிக்கும் “மிகை நாழி” நூல் வெளியீட்டு விழா சிஐடியு கோவை மாவட்டக்குழு சார்பில் நடைபெற்றது. இந்நி கழ்வுக்கு சிஐடியு மாவட்டத் தலைவர் க. மனோகரன் தலைமை வகித்தார். இன்ஜினி யரிங் சங்கத்தின் பொதுச்செயலாளர் சி.துரை சாமி வரவேற்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் யு.கே.வெள்ளிங்கிரி, மூத்த தலைவர்கள் எஸ்.கருப்பையா, எஸ்.ஆறுமுகம், என்.வி. தாமோதரன், எ.ஆர்.கல்யாணசுந்தரம், கே. அய்யாசாமி, வி.பி.இளங்கோவன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் நூலை வெளிட் டார். தமுஎகச மாநிலக்குழு உறுப்பினர் மு. ஆனந்தன் நூல் அறிமுக உரையாற்றினார். கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன், வழக்கறிஞர் வி.நந்தகுமார் மற் றும் சிஐடியு மாநிலச் செயலாளர் எம்.மகா லட்சுமி ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். சிஐடியு மாநிலத் துணைத்தலைவர் எம்.சந் திரன், மாவட்டச் செயலாளர் எஸ்.கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் சிறப்புரையாற்றினர். முடி வில், நூல் ஆசிரியர் ஆர்.வேலுச்சாமி ஏற்பு ரையாற்றினார். சிஐடியு மாவட்ட துணைச்செ யலாளர் கே.ரத்தினகுமார் நன்றி கூறினார். முன்னதாக, கோவையைச் சேர்ந்த எவ ரெஸ்ட் தொழிலாளர்கள் போராட்டத்தின் கள நாயகர்கள் சால்வை அணிவித்து கௌரவிக் கப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் சிஐடியு கோவை மாவட்ட நிர்வாகிகள் ஆர்.ராஜன், டி.பாலகிருஷ்ணன், ஆர்.கேசவ மணி, எ. ஜான் அந்தோணிராஜ், எம்.கே.முத்துக் குமார், எம்.வேளாங்கண்ணி ராஜ், எ.என்.ரபிக், இ.என்.ராஜகோபால், கே.சந்தோஷ் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.