சேலம்,செப்21- நங்கவள்ளி அருகே பொதுக் கிணறு மற்றும் பாதை ஆக்கிரமிக்கப் பட்ட நிலையில், மார்க்சிஸ்ட் கட்சி தலையிட்டு தீர்வு ஏற்படுத்தி உள் ளது. சேலம் மாவட்டம், நங்கவள்ளி ஒன்றியம், சாணாரப்பட்டி கிரா மத்தில் பொதுவான கிணறு உள்ளது. இதில், அவ்வூர் மக்கள் தண்ணீர் எடுப்பது வழக்கம். இந் நிலையில் அந்த கிணற்றையும், அந்த ஊருக்குள் செல்லக்கூடிய பாதையையும் ஒருவர் ஆக்கி ரமித்து தகராறு செய்து வந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கட்சி அரசு அதிகாரி களிடம் முறையிட்டது. ஆனால் சம்பந்தப்பட்ட ஆக்கிர மிப்பாளர் கிணறு மற்றும் நிலத்தை தர மறுத்ததோடு அல்லாமல் ஊர் பொதுமக்கள் மேல் டீசல், மண்ணெண்ணையை ஊற்றியும், தன் மீதும் ஊற்றி கொண்டு தகராறு செய்தார். இதை செல்போன் மூல மாக வீடியோ எடுத்து காவல் துறையில் புகார் செய்யப்பட்டது. இதனையடுத்து புதனன்று சம்பந் தப்பட்ட இடத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்கள், ஊர் பொது மக்கள் துணையோடு அதிகாரிகள் நிலத்தை ஆய்வு செய்து அளவை கல் நட்டு சம்பந்தப்பட்ட நிலம் மற்றும் கிணற்றை ஊருக்கு பொது வாக சேர்த்தனர். இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மேவை. சண்முகராஜா, மற்றும் கட்சியின் முன்னணி ஊழியர்கள் கே.ராஜத்தி, எம்.கார்த்திகாதேவி, கரட்டாண்டி பட்டி கட்சி கிளை செயலாளர் வெங்கடேசன், மோகன்ராஜ், அப் பகுதி கிளை பொறுப்பாளர் கண் ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கள ஆய்வின்போது, சூரப் பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் மாரியப்பன், ஜலகண்டாபுரம் காவல் துறை துணை ஆய்வாளர் பூபதி, நில உரிமையாளர் ராஜா, டி.கந்தசாமி உட்பட ஊர் பொது மக்கள் பங்கேற்றனர். மார்க்சிஸ்ட் கட்சியின் முயற்சியால் தீர்வை எட்டப்பட்டதையடுத்து பொது மக்கள் மார்க்சிஸ்ட் கட்சியினருக்கு நன்றி தெரிவித்தனர்.