உதகை, பிப்.21- உதகை விவேகானந்தா நகர் பகுதியில் விதிமுறையை மீறி கட்டப்பட்ட கட்டிடத்தில், எழுப்பப்பட்ட செல்போன் கோபு ரத்தை அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியு றுத்தி உள்ளனர். உதகை விவேகானந்தா நகர் பகுதியில் 2 ஆயிரத்திற் கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு ஏற்கனவே ஒரு செல்போன் கோபுரம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அதன் அருகே அனுமதியின்றி மற்றும் விதி முறையை மீறி கட்டப்பட்ட மூன்று அடுக்குமாடி குடி யிருப்பில் தனியார் சிலர் செல்போன் கோபுரம் அமைத் துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர், நகராட்சி ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதற்கிடையில், விதிமுறை மீறி கட்டப்பட்ட கட்டிடத்தில் செல்போன் கோபுரம் அமைக்க அனுமதியில்லை என்று நக ராட்சி நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியது. மேலும், உயர்நீதி மன்றத்தில் வழக்கும் தொடுத்தனர். இந்த வழக்கு நிலுவை யில் இருக்கும்போது, விதிமுறை மீறி செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, அதிகாரிகள் உடனடியாக செயல்பட்டு விதிமுறை மீறி கட்டப்பட்ட கட்டிடத்தில் இருக் கும் செல்போன் கோபுரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ள னர்.