கோவை, மார்ச் 29- கோவை - புலியகுளம் பகுதியைச் சேர்ந்த பொது மக்கள், குடிநீர் கேட்டு சாலை மறியல் போராட்டத் தில் ஈடுபட்டனர். கோவையில் கோடை காலம் தொடங்கியது முதலே தண்ணீர் தட்டுப்பாடு துவங் கியுள்ளது. இந்நிலையில், கோவை, புலியகுளம் பகுதியில் குடிநீர் சரிவர வராததால் பொதுமக்கள் புலியகுளம் விநாயகர் கோவில் முன்பு திரண்டனர். காலி குடங்களுடன் 20க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட முயன்ற னர். இதைத்தொடர்ந்து, தக வலறிந்து வந்த ராமநாத புரம் காவல் துறையினர் சாலை மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை மேற் கொண்டனர். இதைத்தொ டர்ந்து மாநகராட்சி அதிகாரி களும் பேச்சுவார்த்தை மேற் கொண்டதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு, அனைவரும் கலைந்து சென் றனர்.