பொள்ளாச்சி, டிச.25- பொள்ளாச்சியை அடுத்த ஆர்.கோபால புரம் அரசு பள்ளியானது இடப்பற்றாக்குறை யில் உள்ளதால், போதுமான இடவசதி ஏற் படுத்த வேண்டும் என பள்ளிக்கல்வித் துறைக்கு பெற்றோர்கள் கோரிக்கை விடுத் துள்ளனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது ராமப் பட்டினம் ஊராட்சி. இதன் கிளை ஊராட் சியான ஆர்.கோபாலபுரம் கிராமத்தில் சுமார் 10 சென்ட் நிலப்பரப்பில் செயல்பட்டு வரும் அரசு நடுநிலைப்பள்ளியில் 200 மாணவர்களும், ஆரம்ப தொடக்கப்பள்ளி யில் 120 மாணவர்களும் கல்வி பயின்று வருகின்றனர். பல ஆண்டுகளாக செயல் பட்டு வரும் நிலையில், பள்ளிக்கட்டிடம் மழை உள்ளிட்ட காரணங்களால் பழுத டைந்து இடிந்து விழும் நிலையில் இருந்தது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர், சட்ட மன்ற உறுப்பினர் மற்றும் கல்வி அதிகாரி கள் உள்ளிட்டோர் பள்ளியை ஆய்வு செய்த பின்னர், அப்பள்ளிக்கு இரண்டு கட்டிடங் கள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது.
அதேநிலப் பரப்பில் உயர்நிலைப் பள்ளியாக 2020-21 கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்டு புதிய தாக இரண்டு கட்டிடங்கள் அவசரகதியில் கடந்த அதிமுக ஆட்சியின்போது கட்டப் பட்டது. தற்போது கொரோனா மூன்றாம் அலை பரவி வரும் சூழலில், 10 சென்ட் நிலப் பரப்பில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருவதால் கொரோனா பாதிப்பு ஏற்படும் என பெற்றோர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பெற்றோர்கள் கூறுகை யில், பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் அதி களவு இடவசதியுள்ள நேதாஜி ரோடு பெண் கள் பள்ளியிலும், சேரிப்பாளையம் பள்ளியி லும் அதிகளவு மாணவர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இச்சூழலில் இடவசதியே இல்லாத கோபாலபுரம் பள்ளி யில் எங்களது குழந்தைகள் எவ்வாறு பாது காப்பாக கல்வி கற்க முடியும்? என்ற அச்சம் எழுந்துள்ளது. எனவே, இதுகுறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உடனடி யாக போர்க்கால அடிப்படையில் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பொள்ளாச்சி மாவட்ட கல்வி அலுவலர் வி.ராஜசேகரன் கூறுகை யில், ஆர்.கோபாலபுரம் பள்ளிக்கட்டிடம் குறித்து ஆய்வு செய்துள்ளோம். இடவசதி இல்லை என்பதை தெரிந்து கொண்டோம். பொள்ளாச்சி பகுதியில் பல பள்ளிகளில் இதே பிரச்சனையை சந்தித்து வருகி றது. ஆர்.கோபாலபுரம் பள்ளிக்கட்டிடத்தை வேறு இடத்தில் மாற்ற ஆலோசிக்கப் பட்டு வருகிறது. மேலும், இப்பிரச்சனை குறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவிக் கப்பட்டுள்ளது. எனவே, கூடிய விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என தெரிவித் தார்.