districts

img

சாலை சீரமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

அவிநாசி, மார்ச் 6 - ராயன் கோவில் செல்லும் சாலையை சீர மைக்கக் கோரி பொதுமக்கள் புதனன்று மங்க லம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர். அவிநாசி ஒன்றியம் வேலாயுதம்பாளை யம் ஊராட்சிக்கு உட்பட்ட ராயன் கோவில் காலனி முதல் வேலாயுதம்பாளையம் பகுதி  வரை உள்ள சாலையை புதுப்பாளையம்,  வேலாயுதம்பாளையம், பூளக்காட்டுப்பா ளையம், தெக்கலூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வரு கின்றனர். ராயன் கோவில் முதல் வேலாயு தம்பாளையம் வரை உள்ள சாலை பழுத டைந்த நிலையில் இருந்துள்ளது. இத யடுத்து,  சாலையை சீரமைக்க நிதி  ஒதுக்கி, சாலையில் ஜல்லி கற்களும் கொட் டப்பட்டுள்ளது. பல மாதங்களாகியும், அடுத் தகட்ட பணிகள் நடைபெறாததால் ஆத்திர மடைந்த பொதுமக்கள் உடனடியாக சாலையை சீரமைக்க கோரி மங்கலம் சாலை யில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தக வலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டார  வளர்ச்சி அலுவலர், அவிநாசி காவல்துறை யினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் சாலையை சீரமைத்துத் தருவ தாக கூறியுள்ளனர். இதையடுத்து பொது மக்கள் கலைந்து சென்றனர்.