தருமபுரி, மார்ச் 2- வேப்பிலைஅள்ளி கிராமத்தில் பழுதடைந்த மின்மோட்டாரை சரி செய்து, குடிநீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தி காலிக்குடங்களுடன் மக் கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், வேப்பிலை அள்ளி கிராமத்தில் நியாய விலைக்கடை அருகே ஜெர்த லாவ் கிளைக் கால்வாய் பகுதியில் வசித்து வரும் குடும்பங்களுக்கு ஆழ் துளை கிணறு மூலம் குடிநீர் விநியோ கிக்கப்பட்டு வந்தது. சிறுமின்விசை பம்பு மூலம் நீரேற்றி குடிநீர் வழங்க புதிய தாக 1000 லிட்டர் குடிநீர்த் தொட்டி அமைக்கப்பட்டது. புதிய குடிநீர்த் தொட்டி அமைத்து இரண்டு ஆண்டு களாகியும் குடிநீர் வழங்கவில்லை. இத னிடையே, இப்பகுதிக்கு குடிநீர் வழங் கும் மின்மோட்டாரை பழுதுபார்க்க எடுத் துச் செல்வதாகக்கூறி ஆழ்துளை கிணற் றில் இருந்து எடுத்துச்சென்று பல மாதங் களாகியும் மின்மோட்டார் பொருத்தப் படவில்லை. கோடைக்காலம் துவங்கி யுள்ளதுபோல் தண்ணீர் தட்டுப்பாடு ஏற் பட்டுள்ள நிலையில், இப்பகுதி மக்கள் டேங்கர் லாரி மூலம் விலை கொடுத்து தண்ணீரை வாங்கி பயன்படுத்தும் நிலை உள்ளது. இதனை கண்டித்தும், பழுத டைந்த மின்மோட்டாரை சரிசெய்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி அப் பகுதி மக்கள் காலிக்குடங்களுடன் குடி நீர் தொட்டி அருகே போராட்டத்தில் ஈடு பட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.