districts

img

புதிய டாஸ்மாக் மதுக்கடையை திறக்காதே! சிபிஎம் தலைமையில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

திருச்செங்கோடு, டிச.30- திருச்செங்கோடு அருகே புதிய டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பொதுமக்கள் உஞ் சனை கிராம நிர்வாக அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  எலச்சிபாளையம், உஞ்சனை  ஊராட்சிக் குட்பட்ட தனியார் நிலத்தில் புதிதாக டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பொதுமக்களுக்கு இடை யூறு ஏற்படுத்தும் இப்பகுதியில், டாஸ்மாக் கடையை அமைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் எலச்சிபாளையம் ஒன்றி யக்குழு உறுப்பினர் எஸ்.சக்திவேல் தலைமை வகித்தார். இதில், மாவட்ட செயற்குழு உறுப் பினரும், எலச்சிபாளையம் ஒன்றிய கவுன்சி லருமான சு.சுரேஷ், ஒன்றிய செயலாளர் கே. எஸ்.வெங்கடாசலம், மாவட்ட குழு உறுப்பி னர் ஜீ.பழனியம்மாள் உள்ளிட்டோர் உரை யாற்றினார். இதில், திராளான பொதுமக்கள் பங்கேற்றனர்.