தாராபுரம், ஜன.25- தாராபுரம் அருகே பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்ற பேருந்தை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தாராபுரம்- பழனி செல்லும் சாலையில் தேர்பட்டி என்ற பகுதி உள்ளது. இங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் சில பேருந்துகள் நின்று செல்வதில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஈரோட்டிலிருந்து -பழனி செல்லும் அரசு பேருந்து திங்களன்று மதி யம் 3 மணி அளவில் தாராபுரம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு பழனி சென் ்றுள்ளது. அந்த பேருந்தில் மணக்கடவு, தேர் பட்டி, கொல்லபட்டி உள்ளிட்ட பகுதி மக்கள் பயணித்த நிலையில், பேருந்தின் ஓட்டுநர் பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத் தாமல் வேறு இடத்தில் நிறுத்தி பயணிகளை இறக்கி விட்டு சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 200க்கும் மேற்பட்டோர் திங்களன்று இரவு தேர்பட்டி பிரிவு அருகே மதியம் பயணி களை இறக்கிவிடாமல் சென்ற பேருந்தை சிறைபிடித்தனர். தொடர்ந்து, ஒட்டுநர் மற் றும் நடத்துனரிடம் வாக்கு வாதத்திலும் ஈடு பட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத் திற்கு சென்ற தாராபுரம் காவல் துணை கண் காணிப்பாளர் தனராசு தலைமையிலான காவல்துறையினர் சாலை மறியலில் ஈடு பட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, போக்குவரத்து கிளை மேலாளர்களிடம் பேசி இப்பகுதி யில் பேருந்து நின்று செல்ல ஏற்பாடு செய்வ தாக உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் தாராபுரம்- பழனி சாலையில் இரண்டு மணி நேரத்திற் கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட் டது.