கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாயன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில், மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், துணை மேயர் ரா.வெற்றிசெல்வன் உள்ளிட்டோர் பங்கேற்று, பொதுமக்களின் மனுக் களை பெற்று சம்பந்தப்பட்ட துறையின் பார்வைக்கு அனுப்பி தீர்வு காண உத்தரவிட்டனர்.