districts

img

மதுபானக் கடை திறக்க எதிர்ப்பு: பொதுமக்கள் தர்ணா

தருமபுரி, பிப்.16- கடத்தூர் அருகே புதிதாக மதுபா னக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, 50க்கும் மேற்பட்ட பெண்கள், தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், கடத்தூர் வட் டம், ஒசஹள்ளி ஊராட்சிக்குபட்ட வேடி யூர், பெருமாள்கோவில்பட்டி பகுதிக ளுக்கு இடையே புதிதாக மதுபானக் கடை அமைய உள்ளதாக தகவல் வெளி யானது. இது பள்ளி, கல்லூரி மாண வர்கள் சென்று வரும், மிக முக்கிய சாலையாக உள்ளது. மதுபானக் கடை திறக்கபட்டால் விபத்துகள், வன்முறை  சம்பவங்கள் உள்ளிட்டவை அதிகள வில் நடக்கும் சூழல் ஏற்படும். இதனால், மதுபானக் கடையை அங்கு அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி வெள்ளியன்று  அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சி யரிடம் மனு அளிக்க சென்றுள்ளனர். அதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலை யில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளா கம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட னர். அதனைத்தொடர்ந்து, அங்கு வந்த மாவட்ட வருவாய் அலுவலர் பால்  பிரின்ஸ்லி ராஜ்குமார் போராட்டக்காரர் களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு  செய்து, கடையை வேறு இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறு தியளித்தார். அதன்பேரில் போராட் டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.