districts

img

தம்மம்பட்டியிலிருந்து ஏற்காட்டிற்கு பேருந்து இயக்க பொதுமக்கள் கோரிக்கை

சேலம், மார்ச் 17- தம்மம்பட்டியிலிருந்து ஏற்காட்டிற்கு புதிய வழித் தடம் ஏற்படுத்தி அரசு பேருந்து இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அரசு போக்குவரத்துக் கழக பணிமனையிலிருந்து மல்லியகரை, ஆத்தூர், வாழப் பாடி, சேலம் வழியாக ஏற்காட்டிற்கு தினமும் பேருந்தை புதிய வழித்தடத்தில் இயக்க வேண்டும் என்பது அப்பகுதி பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. இதன் மூலம் ஏற்காட்டிற்கு கோடை காலமான மார்ச், ஏப்ரல், மே, ஜூன்  மாதங்களில் அதிக எண்ணிக்கையில் பயணிகள் செல்வதற்கு வசதியாக இருக்கும். மேலும், பிற மாதங்களிலும் ஆத்தூர், வாழப்பாடி, சேலம் ஆகிய பகுதிகளுக்கு இந்தப் பேருந்தில் செல்வதற்கு வசதியாக இருக்கும். பயணிகள் எண்ணிக்கை எப்போதும் குறையாது. எனவே, தம்மம்பட்டியிலிருந்து ஏற் காட்டிற்கு தினமும் பேருந்தை இயக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.