districts

img

குண்டும், குழியுமான சாலையை செப்பனிட பொதுமக்கள் கோரிக்கை

தருமபுரி, அக்.28- தருமபுரி, வெண்ணாம்பட்டி ரயில்வே கேட்- பிடமனேரி இடையே உள்ள குண்டும், குழியுமான சாலையை  செப்பனிடு மாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  தருமபுரி ரயில்  நிலையத்தின் மேற்கு பகுதியில் சரக்கு வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தார்ச்சாலை அமைக்கப்பட்டது. தருமபுரி - வெண்ணாம்பட்டி ரயில்வே கேட் பகுதி மற்றும் பிட மனேரி பகுதி ஆகியவற்றை இணைக்கும் வகையில் அமைக் கப்பட்ட சுமார் 2 கிலோ மீட்டர்  நீளம் கொண்ட இந்த தார்ச் சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வந்தன. இந்த சாலை கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியது. இதனால் இந்த சாலையில் அதிக வாகனங்கள் சென்றுவர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

 வெண்ணாம்பட்டி ரயில்வே கேட் வழியாக செல்லும் வாக னங்கள் போக்குவரத்து கடந்த சில ஆண்டுகளில் அதிகரித் துள்ளது. வெண்ணாம்பட்டி ரயில்வே கேட்- பிடமனேரி இணைப்பு சாலை சீரமைக்கப்படாததால் தருமபுரி ரயில்  நிலைய சாலை, நேதாஜி பைபாஸ் சாலை ஆகியவற்றில் வாகன போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக வெண்ணாம்பட்டி, வீட்டு வசதி வாரிய குடி யிருப்பு, ஆயுதப்படை வளாகம் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் காலை, மாலை நேரங்களில் தருமபுரி நகர பகுதிக்கு வருவோரும், தருமபுரி நகர பகுதியில் இருந்து மேற் கண்ட பகுதிகளுக்கு செல்வோரும் அடிக்கடி வாகன போக்கு வரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகிறார்கள்.  குறிப்பாக காலை நேரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வரும் மாணவ-மாணவிகள், பல்வேறு அலுவலக பணி களுக்கு செல்வோர் உரிய நேரத்திற்கு செல்ல இயலாமல் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். இதேபோல் தருமபுரி ரயில் நிலையத்தில் வந்து நிற்கும் சரக்கு ரயில்களில் இருந்து சரக்குகளை ஏற்றி செல்ல வெண்ணாம்பட்டி ரெயில்வே கேட் பகுதிக்கு வரும் நூற்றுக்கணக்கான சரக்கு வாகனங்க ளும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொள்கின்றன. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண இந்த இணைப்பு சாலையை விரை வாக செப்பனிடுமாறு அப்பகுதி பொதுமக்கள், மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளனர்.