உடுமலை, பிப்.6- வாடிக்கையாளர்களிடம் மின் கட்டணம் பெற உடுமலை மின் வாரியத்தில் ஒரு அலுவலகம் மட்டுமே பயன்படுத்துவ தால், கூடுதல் பணியாளர்களை மின் வாரிய அதிகாரிகள் நிய மனம் செய்ய வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்து உள்ளார்கள். உடுமலை மின் வாரிய அலுவலக வளாகத்தில் வாடிக் கையாளர்கள் மின் கட்டணம் செலுத்த பத்துக்கும் மேற்பட்ட அலுவலகம் இருந்தாலும், தற்பொழுது ஒரு அலுவலகத்தில் மட்டுமே மின் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. மேலும் இந்த அலுவலகத்தில் உடுமலை மட்டும் இல்லாமல் சுற்றி உள்ள பகுதியிலிருந்து தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மின் கட்டணம் செலுத்த வருகிறார்கள். ஆனால் இங்கு ஒரு அலுவலகத்தில் மட்டும் கட்டணம் பெறுவதால் பொது மக்கள் மின் கட்டணம் செலுத்தப் பல மணி நேரம் வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்படுகி றது. எனவே மின் வாரிய அதிகாரிகள் கூடுதல் பணியாளர் களை நியமனம் செய்து, உடுமலை மின் வாரிய அலுவலகத் தில் ஏற்கனவே பயன்பாட்டிலிருந்த அனைத்து அலுவலகத் திலும் மின் கட்டணம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கையை வலியுறுத்தினர்.