districts

img

மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கல்

தருமபுரி, ஜன.11- காவல் துறை மற்றும் அமைச்சு பணியாளர்களின் குழந் தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகையை தருமபுரி காவல் கண் காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் வழங்கினார். தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத் தில், கடந்த கல்வியாண்டில் 10 மற்றும் 12 வகுப்பு பயிலும், காவல்துறை மற்றும் அமைச்சு பணியாளர்களின் குழந்தை களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் உள்ள முதல் 10 இடங்கள் பிடித்த 10 வகுப்பு மாணவர்களுக்கும், 12 ஆம் வகுப்பில் 10 இடங்கள் பிடித்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டன. 10 ஆம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவருக்கு ரூ.13 ஆயிரம், இரண்டாவது மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ரூ9 ஆயிரம், மூன்றாவது மதிப்பெண் பெற்றவர்களுக்கு ரூ.5  ஆயிரம், மற்ற அனைவருக்கும் ரூ.4 ஆயிரம் வழங்கப்பட்டன. இதேபோல், 12 ஆம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்றவ ருக்கு ரூ.15 ஆயிரம், இரண்டாவது இடம் பெற்ற மாணவருக்கு ரூ11 ஆயிரம், மூன்றாவது இடம் பெற்றவருக்கு ரூ.7 ஆயிரம், மற்ற அனைவருக்கும் ரூ.5 ஆயிரம் என மொத்தம் ரூ.123000  ரூபாயினை தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீ பன் ஜேசுபாதம் வழங்கினார்.