districts

img

சாதிய பாகுபாட்டுடன் வீட்டுமனை வழங்குவதா?

கோபி, பிப்.13- கோபிசெட்டிபாளையம் அருகே சாதிய பகுபாட்டுடன் இலவச வீட்டு மனைகள் வழங்கியதால் கிராம நிர்வாக  அலுவலகம் முன்பு, பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பர பரப்பு ஏற்பட்டது.  ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபா ளையம் அருகே உள்ள பொம்மநாயக் கன்பாளையம் ஊராட்சியில் சாணார்பா ளையம், ஒத்தகுதிரை, கே.மேட்டுப்பா ளையம், செல்லகுமாரபாளையம், கொன்னமடை, உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.  இந்நிலையில் பொம்மநாயக்கன்பாளையம் ஊராட்சி யில் வீடு இல்லாதவர்கள், வாடகை  வீடுகளில் வசிப்பவர்கள் வருவாய் துறை சார்பில் நடைபெறும் முகாம், முதல்வரின் சிறப்பு முகாம், கிராம சபா கூட்டம், உள்ளிட்ட பல்வேறு முகாம் களில் அதிகாரிகளிடம் இலவச வீட்டு மனை வேண்டி மனு அளித்து வந்த னர். இதனையடுத்து, பொம்மநாயக்கன் பாளையம் ஊராட்சியில் கடந்த சில  மாதங்களுக்கு முன் வீடு இல்லாதவர்க ளுக்கு இலவச வீட்டுமனை வழங்க ஏழு  பயனாளிகளை தேர்வு செய்யப்பட்டது. இதில் மூன்று பயனாளிகள் தலித் சமூ கத்தை சேர்ந்தவர்கள்.  இந்நிலையில், ஆதிக்க சாதியினர்  உள்ள பகுதியில், தலித் சமூகத்தைச்  சேர்ந்த மக்கள் எப்படி குடியமர்த்து வீர்கள் என சிலர் எதிர்ப்பு தெரிவித்துள் ளதாக கூறப்படுகிறது. இதன் பிறகு, ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் கிராம  நிர்வாக அலுவலரின் உத்தரவு பேரில்,  ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த நான்கு  பயனாளிகளை மட்டும் தேர்வு செய்து  வீட்டுமனை வழங்க உத்தரவிடப்பட் டது.  இதனையறிந்த ஊர்பொதுமக்கள், வீட்டுமனை கோரி 80 க்கும் மேற்பட் டோர் மனு அளித்திருந்த நிலையில், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த பய னாளிகளை மட்டும் நிராகரித்தது குறித்து கிராம நிர்வாக அலுவரிடமும், ஊராட்சி மன்றத் தலைவரிடமும் கேட்ட போது முன்னுக்கு பின் பதிலளித்துள் ளனர். இதனைத்தொடர்ந்து, வீட்டுமனை வழங்காமல் நிராகரிக்கப்பட்ட மூவருக் கும் நியாயம் கிடைக்க வேண்டும். வீட்டு மனை இல்லாத அனைவருக்கும் வீட்டு மனை வழங்க வேண்டும் எனக் கோரி,  பொம்மநாயக்கன்பாளையம் கிராம நிர் வாக அலுவலம் முன்பு திரண்டு தலித் சமுகத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடு பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.  மேலும், எங்களது கோரிக்கையின் மீது நடவடிக்கை எடுக்காவிடில், அரசு  வழங்கிய குடும்ப அட்டை, ஆதார் கார்டு, வாக்காளர் அட்டைகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்ப டைப்பதாகவும் எச்சரித்தனர்.