districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

ஒப்பந்த பணியாளர்களுக்கு சட்டப்படி போனஸ் வழங்குக - சிஐடியு

திருப்பூர், அக்.19 – திருப்பூர் மாநகராட்சி மற்றும் இம்மாவட்டத்தில் உள்ள  ஆறு நகராட்சிகளில் வேலை செய்யும் ஒப்பந்த தூய்மைப்  பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களுக்கும்  சட்டப்படி நியாயமான போனஸ் தொகையை இம்மாத  இறுதிக்குள் வழங்கும்படி சிஐடியு சார்பில் சம்பந்தப்பட்ட  உள்ளாட்சி நிர்வாகங்களுக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள் ளது. திருப்பூர் மாநகராட்சி ஆணையர் மற்றும் தாராபுரம், உடுமலைபேட்டை, பல்லடம், திருமுருகன்பூண்டி, காங்கே யம், வெள்ளகோவில் நகராட்சி ஆணையர்களுக்கும்  சிஐடியு திருப்பூர் மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ் அனுப் பியுள்ள கடிதத்தில், சம்பந்தப்பட்ட மாநகராட்சி, நகராட்சி களில் அவுட்சோர்சிங் அடிப்படையில் தனியார் ஒப்பந்ததா ரரிடம் விடப்பட்டிருக்கும் பணிகளில் வேலை செய்யும்  தூய்மைப் பணியாளர்கள், குடிநீர் பணியாளர்கள், வாகன  ஓட்டுநர்கள், டிபிசி ஊழியர்கள் என அனைவருக்கும்,  அந்தந்த ஒப்பந்ததாரர்கள் மூலமாக சட்டப்படி நியாய மான தீபாவளி போனஸ் தொகையை இந்த அக்டோபர் மாதம் இறுதிக்குள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்  என கேட்டுக் கொண்டிருக்கிறார். திருப்பூர் மாநகராட்சி மற்றும் ஆறு நகராட்சிகளில்  1500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படை யில் வேலை செய்து வருகின்றனர். ஒப்பந்தப் பணியாளர் களுக்கு போனஸ் சட்டம் பொருந்தும், அவர்களுக்கும் போனஸ் வழங்க வேண்டும் என சட்டம் உள்ளது. கடந்த  ஆண்டு இக்கோரிக்கையை வலியுறுத்திய போது, ஒப்பந்த தாரர்களால் போனஸ் தர காலதாமதம் செய்யப்பட்டது. இதையடுத்து போராட்டம் நடத்த வேண்டிய நிலைக்குச்  சென்று கடைசி தருணத்தில் ஒப்பந்தப் பணியாளர் களுக்குப் போனஸ் கிடைத்தது. எனினும் இந்த ஆண்டு அதுபோன்ற ஒரு காலதாமத  நிலைமைக்குச் செல்லாமல் தவிர்த்து, சம்பந்தப்பட்ட  உள்ளாட்சிகளில் அதிகாரம் பெற்ற ஆணையர்கள், ஒப்பந்த தாரர்களை முன்கூட்டியே அழைத்துப் பேசி, சட்டப்படி நியாய மான போனஸ் தொகையை ஒப்பந்த பணியாளர்களுக்கு  வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று கே.ரங்க ராஜ் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

ஊராட்சித் தலைவரது மகனின் அதிகார அத்துமீறல்: கட்டிட அனுமதி தராமல் இழுத்தடிப்பு

திருப்பூர், அக். 19 – காங்கேயம் அருகே பழையகோட்டை ஊராட்சியில் குடியிருப்பவர் சுமார் 200 சதுர அடியில் கூடுதல் கட்டிடம் கட்ட விண்ணப் பித்து ஆறு மாத காலமாக சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்தினர் அனுமதி தராமல்  உள்நோக்கத்துடன் இழுத்தடித்து காலதாம தம் செய்து வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் காங்கேயம் ஊராட்சி  ஒன்றியம் பழையகோட்டை ஊராட்சிக்கு உட் பட்டது குட்டப்பாளையம் கிராமம். இந்த கிரா மத்தைச் சேர்ந்தவர் எம்.சண்முகசுந்தரம். இவர் தனக்கு சொந்தமான இடத்தில் சுமார்  200 சதுரஅடிக்கு கூடுதல் கட்டிடம் கட்ட  வரைபட அனுமதி கோரி கடந்த மே மாதம்  ஊராட்சிமன்றத்தில் விண்ணப்பித்திருக் கிறார். இதில் உடனடியாக பதில் தெரிவிக் காத ஊராட்சி நிர்வாகம் காலதாமதம் செய்து,  சண்முகசுந்தரத்திடம், ஏற்கெனவே கட்டியி ருக்கும் கட்டிடங்களுக்கு அனுமதி பெற்ற விப ரங்களை சமர்ப்பிக்கும்படி பதில் கடிதம் அனுப்பியுள்ளனர். இதற்கு சண்முகசுந்தரம், பழைய கோட்டை ஊராட்சி நிர்வாகத்திடமே சம்பந் தப்பட்ட அனுமதி கடித விபரங்கள் இருக்கின் றன என்று தெரிவித்து பதிலளித்துள்ளார். அதன் பிறகும் கூடுதல் கட்டிடத்திற்கு வரை பட அனுமதி தராமல் காலதாமதம் செய்துள் ளனர். அத்துடன், இவர் ஏற்கெனவே 200.75 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டிடங்கள் கட்டி யிருப்பதால் கூடுதல் கட்டிடத்திற்கான வரை பட அனுமதியை மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் பெற வேண்டும் என்றும் பதில் அளித்துள்ளனர். இதனால் சண்முகசுந்தரம் திருப்பூர் கும ரன் வளாகத்தில் உள்ள நகர் ஊரமைப்பு அலு வலகத்திற்கு வந்து வரைபட அனுமதி குறித்து விசாரித்திருக்கிறார். அவர்கள் வழக் கம் போல் அலட்சியமாக பதில் கூறி, அவரது  கடிதத்தை மீண்டும் ஊராட்சி நிர்வாகத்திற்கு அனுப்பியதாக தெரிவித்துள்ளனர். இவ் வாறு சண்முகசுந்தரத்தின் விண்ணப்பத் திற்கு அனுமதி தராமல் ஊராட்சி நிர்வாகம் வேணடுமென்றே அலைக்கழித்து வருவதாக  சண்முகசுந்தரம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

காரணம் என்ன?

பழையகோட்டை ஊராட்சிமன்றத் தலை வராக இருப்பவர் மீனாட்சி. இவரது மகன்  சண்முகசேகரன் அதிமுகவை சேர்ந்தவர், முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவராக இருந் தவர். மீனாட்சி வயதான பெண் என்ற நிலை யில், சண்முகசேகரன்தான் ஊராட்சி அதிகா ரம் செலுத்தி வருவதுடன், அத்துமீறி அதி கார முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக வும் கூறப்படுகிறது. கடந்த ஓராண்டுக்கு முன்பு இவரது தூண்டுதலில் பொது மக்களின்  குடிநீர் குழாய்கள் துண்டிக்கப்பட்டது. இதைக் கண்டித்து மக்கள் வீடுகளில் கறுப்புக்  கொடி கட்டிப் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.  சண்முகசேகரனின் அதிகார அத்துமீறலைக் கண்டித்து திமுக கிளைச் செயலாளர் என்ற முறையில் சண்முகசுந்தரம் போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த பின்னணியில் தற்போது இவருக்கு கூடுதல் கட்டிட வரைபட அனு மதி தராமல் இழுத்தடிப்பதாகத் தெரிகிறது. இதற்கிடையே காங்கேயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் சண்முகசுந்தரம் இப்பிரச்சனை குறித்து தகவல் தெரிவித் தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, கூடுதல் கட்டிட வரைபட அனுமதி தர வலியுறுத்தி, பழையகோட்டை ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு பூட்டுப் போடும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக சண்முக சுந்தரம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், காவல் துறைக்கும் தகவல் தெரிவித்து ஊராட்சி அலுவலகத்துக்குச் சென்றார். இதையடுத்து காங்கேயம் ஊராட்சி ஒன் றிய மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் மற் றும் காவல் துறையினர் பழையகோட்டை ஊராட்சிமன்ற அலுவலகத்துக்குச் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சில நாட்க ளில் கூடுதல் கட்டிட வரைபட அனுமதி தருவ தாக சண்முகசுந்தரத்திற்கு உறுதியளித் தனர். கூடுதல் கட்டிட அனுமதி தருவது தொடர்பாக ஊரக வளர்ச்சித் துறையினரி டம் விசாரித்தபோது, 10 ஆயிரம் சதுர அடி வரை குடியிருப்பு கட்டிடத்திற்கு ஊராட் சிமன்றத் தலைவர் அனுமதி கொடுக்கலாம். தற்போது கட்டிட வரைபட அனுமதி தரும்  நடைமுறை ஆன்லைன் முறைக்கு மாற்றப் பட்டுள்ளது. ஆன்லைன் முறையில் அனுமதி  தருவது பற்றி பெருமளவு பயிற்சி இல்லாத நிலை உள்ளது. ஆன்லைன் செயல்பாடும் தமிழகம் முழுவதும் செயல்படாமல் உள் ளது என்றும் கூறினர். ஆனால் சண்முகசுந்தரத்தின் விண்ணப் பத்தைப் பொருத்தவரை ஊராட்சித்தலை வரின் மகனது தலையீட்டினால்தான் அனு மதி தராமல் இழுத்தடிக்கப்பட்டு வந்துள்ளது  வெளிப்படையான உண்மை. எனவே இதில்  மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தி உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று சண் முகசுந்தரம் கோரியுள்ளார்.

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அவிநாசியில் மருத்துவ மதிப்பீட்டு முகாம்

அவிநாசி, அக்.19- அவிநாசியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் அவிநாசி அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியில்  நடைபெற்றது. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் துறை, மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலகம், அவிநாசி வட்டார வளமையம் சார் பில் நடைபெற்ற இம்முகாமில், மாற்றுத்திறன் சான்றிதழ் புதுப் பித்தல், புதிய சான்றிதழ் வழங்குதல், தேசிய அடையாள அட்டை, தனித்துவ அடையாள அட்டை ஆகியவை வழங்கு தல், ரயில், பேருந்து பயணச்சான்று, உதவி உபகரணங்கள்,   உதவித் தொகை, முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் அறுவை சிகிச்சை ஆகிய பதிவுகள் நடைபெற்றது. மேலும்  அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கொண்ட குழுவினர் மூலம் கண், காது, மூக்கு, தொண்டை, மனநல மருத்துவம்,  உடலியக்கம் மற்றும் நரம்பியல் ஆகிய மருத்துவ பரிசோத னைகளும் மேற்கொள்ளப்பட்டன. இம்முகாமில் 208 பேர் பங் கேற்றதில், 60 பேருக்கு புதிய அடையாள அட்டை வழங்கப்பட் டது. இம்முகாமை மாவட்ட மாற்றுத்திறானாளிகள் நல அலுவலர்  வசந்த ராம்குமார், மாவட்ட உதவித் திட்ட ஒருங்கிணைப்பா ளர் அண்ணாதுரை, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஜான்  கரோலின் அக்ஸிலியா, பாலசுந்தரி, வட்டாரக்கல்வி அலுவ லர்கள் மகேஸ்வரி, சுமதி, திருநாவுக்கரசு, வட்டார மேற்பார் வையாளர் சுரேஷ், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்று நர்கள், சிறப்பாசிரியர்கள், இயன்முறை மருத்துவர் உள்ளிட் டோர் ஒருங்கிணைத்தனர்.

மனைவியை கொல்ல முயன்றவருக்கு ஆயுள் தண்டனை

திருப்பூர், அக். 19 - திருப்பூர் அருகே மனைவி மீது டீசலை ஊற்றி தீவைத்துக்  கொலை செய்ய முயன்றவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண் டனை விதித்துள்ளது. திருமுருகன்பூண்டி ஆத்துப்பாளையம் பாரதிநகரை சேர்ந்தவர் கவுதம் (29). ஆட்டோ டிரைவர். ஆந்திர மாநி லத்தை சேர்ந்த லட்சுமி (25). இவர் பெருமாநல்லூரில் உள்ள  பனியன் நிறுவனத்தில் வேலை செய்தபோது, கவுதமுடன் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து வாழ்ந்து வந்த னர். இந்நிலையில் கர்ப்பிணியாக இருந்த லட்சுமிக்கும், கண வர் கவுதமுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு அடிக்கடி சண்டை செய்துள்ளனர். கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை 13  அன்று வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற் பட்டுள்ளது. இதில் கோபமடைந்த கவுதம், வீட்டில் இருந்த டீசலை  லட்சுமியின் மீது ஊற்றி தீ வைத்தார். இதில் படுகாயம் அடைந்த லட்சுமி மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவம னையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைக்கு பிறகு அவர் உயிர் பிழைத்தார்.  இதுதொடர்பாக லட்சுமி அளித்த புகாரின் பேரில் கொலை  முயற்சி வழக்குப்பதிவு செய்து பெருமாநல்லூர் போலீசார்  கவுதமை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை திருப்பூர்  மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. மனைவியை கொலை முயற்சி செய்த குற்றத்துக்கு ஆயுள் தண்டனை, ரூ.5  ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மனைவியை கொடுமைப் படுத்திய குற்றத்துக்கு 3 ஆண்டு கடுங்காவல் சிறை தண் டனை, ரூ.2,500 அபராதம் விதித்தும், இதை ஏக காலத் தில் கவுதம் அனுபவிக்குமாறு நீதிபதி பாலு உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு வக்கீல் ஜமீலா பானு ஆஜராகி வாதா டினார்.

கருவலூரில் இன்று மின் தடை

அவிநாசி, அக்.19 - கருவலூர் துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட பகுதிக ளில் மாதாந்திரப் பாரமரிப்புப் பணிகள் நடைபெற இருப்ப தால், வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி  வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என  மின்வாரியத்தினர் அறிவித்துள்ளனர். இதனால் கருவலூர், அரசப்பம்பாளையம், நைனாம்பா ளையம், ஆரியக்கவுண்டன்பாளையம், அனந்தகிரி, எலச்சிப் பாளையம், மருதூர், காளிபாளையம், நம்பியாம்பாளையம்,  உப்பிலிபாளையம், மனப்பாளையம், காரைக்காபாளையம், முறியாண்டாம்பாளையம், குரும்பபாளையம், பெரிய காட்டுப்பாளையம், செல்லப்பாளையம் ஆகிய பகுதிக ளில் மின் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்பட் டுள்ளது.

மாநகராட்சி, நகராட்சிகளில் ஒப்பந்த பணியாளர்களுக்கு சட்டப்படி போனஸ் வழங்க சிஐடியு கோரிக்கை

திருப்பூர், அக். 19 – திருப்பூர் மாநகராட்சி மற்றும் இம்மா வட்டத்தில் உள்ள ஆறு நகராட்சிகளில் வேலை செய்யும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களுக்கும் சட்டப்படி நியாய மான போனஸ் தொகையை இம்மாத இறுதிக்குள் வழங்கும்படி சிஐடியு சார் பில் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வா கங்களுக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள் ளது. திருப்பூர் மாநகராட்சி ஆணையர் மற்றும் தாராபுரம், உடுமலைபேட்டை, பல்லடம், திருமுருகன்பூண்டி, காங்கே யம், வெள்ளகோவில் நகராட்சி ஆணை யர்களுக்கும் சிஐடியு திருப்பூர் மாவட் டச் செயலாளர் கே.ரங்கராஜ் அனுப் பியுள்ள கடிதத்தில், சம்பந்தப்பட்ட மாந கராட்சி, நகராட்சிகளில் அவுட்சோர் சிங் அடிப்படையில் தனியார் ஒப்பந்ததா ரரிடம் விடப்பட்டிருக்கும் பணிகளில்  வேலை செய்யும் தூய்மைப் பணியாளர் கள், குடிநீர் பணியாளர்கள், வாகன ஓட்டுநர்கள், டிபிசி ஊழியர்கள் என  அனைவருக்கும், அந்தந்த ஒப்பந்ததா ரர்கள் மூலமாக சட்டப்படி நியாய மான தீபாவளி போனஸ் தொகையை இந்த அக்டோபர் மாதம் இறுதிக்குள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறார். திருப்பூர் மாநகராட்சி மற்றும் ஆறு  நகராட்சிகளில் 1500க்கும் மேற்பட்ட  பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படை யில் வேலை செய்து வருகின்றனர். ஒப் பந்தப் பணியாளர்களுக்கு போனஸ் சட்டம் பொருந்தும், அவர்களுக்கும் போனஸ் வழங்க வேண்டும் என சட்டம்  உள்ளது. கடந்த ஆண்டு இக்கோரிக் கையை வலியுறுத்திய போது, ஒப்பந்த தாரர்களால் போனஸ் தர காலதாம தம் செய்யப்பட்டது. இதையடுத்து போராட்டம் நடத்த வேண்டிய நிலைக் குச் சென்று கடைசி தருணத்தில் ஒப் பந்தப் பணியாளர்களுக்குப் போனஸ் கிடைத்தது. எனினும் இந்த ஆண்டு அதுபோன்ற  ஒரு காலதாமத நிலைமைக்குச் செல்லா மல் தவிர்த்து, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி களில் அதிகாரம் பெற்ற ஆணையர்கள், ஒப்பந்ததாரர்களை முன்கூட்டியே அழைத்துப் பேசி, சட்டப்படி நியாய மான போனஸ் தொகையை ஒப்பந்த பணியாளர்களுக்கு வழங்குவதை உறு திப்படுத்த வேண்டும் என்று கே.ரங்க ராஜ் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

‘வீடுகளை காணவில்லை’ என புகார்

சேலம், அக்.19- ‘வீடுகளை காணவில்லை’ என சேலம் ஆட்சியர் அலு வலகத்தில் பொதுமக்கள் புகாரளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சேலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மல்லமூப்பம்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். இதன் பின் பொதுமக்கள் ஆட்சியர் செ.கார்மேகத்தை சந்தித்து புகார் மனு அளித்தனர். அம்மனுவில், மல்லமூப்பம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட காந்திநகர் பகுதியில் நாங்கள் அனைவ ரும் வாடகை வீடுகளில் குடும்பத்துடன் வசித்து வருகிறோம். பல ஆண்டுகளாக வீட்டுமனை கேட்டு போராடி வருகி றோம். அதன்படி, கடந்த அக்.9 ஆம் தேதியன்று ஆட்சியர் அலு வலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத் தில் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு அளித்தோம். அதன் பிறகு விண்ணப்பங்கள் மீது கள ஆய்வு செய்த கிராம நிர்வாக அலுவலர், அனைவருக்கும் சொந்தமாக வீடுகள் இருப்பதாக தவறான தகவலை அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார். இத னால் எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அனைவருக்கும் சொந்த வீடுகள் இருப் பதாக கிராம நிர்வாக அலுவலர் கூறுகிறார். அவர் கூறும் எங்க ளது வீடுகளை காணவில்லை. அந்த வீடுகளை கண்டுபிடித்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும், சம்பந்தப்பட்ட நிர் வாக அலுவலரை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ரூ.1.31 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

தருமபுரி, அக்.19- 316 பயனாளிகளுக்கு ரூ.1.31 கோடி மதிப்பில் நலத்திட்ட  உதவிகளை தருமபுரி ஆட்சியர் கி.சாந்தி வழங்கினார். தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், தீர்த்தமலை அருகே  உள்ள பொய்யப்பட்டி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட  முகாம் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தலைமையில் நடை பெற்றது. இதில் 167 பயனாளிகளுக்கு ரூ.68.85 லட்சம் மதிப்பீட்டில் இலவச வீட்டுமனை பட்டாக்கள், இணைய வழி பட்டாக்கள், நத்தம் பட்டா மாறுதல் ஆணைகளையும், 87 பயனாளிகளுக்கு ரூ.16.49 லட்சம் மதிப்பீட்டில் மாற்றுத்திற னாளி, முதியோர், முதிர்கண்ணி, ஆதரவற்ற விதவை, திரு மணம், இயற்கை மரணம் உள்ளிட்ட உதவித்தொகைகள் மற் றும் விபத்து இழப்பீட்டு தொகைகள் வழங்கப்பட்டன. மேலும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் 12 பயனாளிகளுக்கு ரூ.5.75 லட்சம் மதிப்பீட்டில் விதைகள், உயிர் உரங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப் பட்டன.  தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.1.35 லட்சம் மதிப்பீட்டில் பசுமை குடில், குழத்தட்டு நாற்றுகள், நுண்ணீர் பாசனம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள், கூட்டுறவுத்துறை சார்பில் 46 பயனாளிகளுக்கு ரூ.38.49 லட்சம் மதிப்பீட்டில் பயிர்க் கடன் மற்றும் கால்நடை பராமரிப்பு கடன் உதவிகள் என  மொத்தம் 316 பயனாளிகளுக்கு ரூ.1.31 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர்  கி.சாந்தி வழங்கினார். இந்நிகழ்வில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் உட்பட மக்கள் பிரதிநிதிகள் மற் றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

மூச்சுக்குழாயில் சிக்கிய உலோகம்: அரை மணி நேரத்தில் அகற்றி அரசு மருத்துவர்கள் சாதனை

சேலம், அக்.19- மூச்சுக்குழாயில் சிக்கிய உலோகத்தை அறுவை சிகிக்சை மூலம் அரை  மணி நேரத்தில் அகற்றி, சேலம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். சேலம் மாவட்டம், கன்னக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த 30 வயது  மதிக்கத்தக்க பெண் ஒருவர், நுரையீரல் மூச்சுக்குழாயில் சுமார் 4 சென்டி மீட்டர் அளவிலான உலோகம் சிக்கி ஆபத்தான நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த காது, மூக்கு, தொண்டை நிபுணர் மருத்துவர்கள் குழு அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்தனர். இதன்படி காது, மூக்கு, தொண்டை மருத்துவப்பிரிவு துறை தலைவர் கிருஷ்ண சுந்தரி தலைமையில் மருத்துவர்கள் பிரவீன், கவிதா, மகேந்திரன் மற்றும் நடராஜன் ஆகிய கொண்ட குழுவினர், உடனடியாக தமிழக முதல மைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் அரை மணி நேரத்தில் மூச்சுக்குழாயில் சிக்கியிருந்த உலோகத்தினை பாதுகாப்பாக அகற்றினர். 8 ஆண்டு களுக்கு முன்பு விபத்தில் பாதிக்கப்பட்ட இப்பெண்ணுக்கு தொண்டை  பகுதியில் ‘ட்ரக்காஷ்மி’ பொருத்தப்பட்டுள்ளது. இந்த உலோகத்துடன் வசித்து வந்தவர், நாளடைவில் அது துருப்பிடித்து தொண்டை பகுதி வழியாக மூச்சுக்குழாயில் சிக்கியது தெரிவந்தது. தற்போது அந்த பெண் காப்பாற்றப்பட்டு நலமுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சேலம் அரசு மருத்துவமனை முதல்வர் மணி செய்தி யாளர்களிடம் கூறுகையில், இதேபோன்று வெளி பொருட்கள் மனித உடலுக்குள் செல்லும்போது, அதனை பாதுகாப்பாக அகற்ற வேண்டிய  நிலை உள்ளது. சேலம் அரசு மருத்துவமனையில் நவீன டெலிபிரான்ஸ் ஸ்கோப்  கருவி உள்ளதால், தற்போது அந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட் டது. சேலம் அரசு மருத்துவமனையில் மட்டும் இதேபோன்று 50க்கும் மேற் பட்ட அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் இது போன்று பிரச்சனைகளில் சிக்கும் போது, காலம் தாழ்த்தாமல் மருத்துவம னைக்கு சென்று, சிகிச்சை மேற்கொள்ள வேண்டும், என்றார். இந்நிகழ்வின்போது, மருத்துவமனை கண்காணிப்பாளர் தனபால், காது, மூக்கு, தொண்டை துறை தலைவர் கிருஷ்ண சுந்தரி மற்றும் மருத்துவர்கள் உடனிருந்தனர்.

கலைத்திருவிழா

ஈரோடு, அக்.19- தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை சார்பில் கலைத்திரு விழா என்ற பெயரில் பல் வேறு தனித்திறன் போட்டி கள் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடத்த உத்தர விட்டுள்ளது. ஈரோடு மாவட் டத்தில் பள்ளிகள் அளவிலான போட்டிகள் ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலை யில், புதனன்று முதல் வட் டார அளவிலான கலைத்திரு விழா போட்டிகள் தொடங்கப் பட்டுள்ளது. இதன்தொடர்ச் சியாக, வெள்ளியன்று (இன்று) மேல்நிலை வகுப்பு களில் பயிலும் மாணவர்க ளுக்கு கலைத்திருவிழா நடைபெற உள்ளது. வட்டார அளவில் நடைபெறும் போட் டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவியர்கள் அடுத்த கட்டமாக மாவட்ட அளவில் நடைபெற உள்ள போட்டிகளில் கலந்து கொள் வர், என தெரிவிக்கப்பட்டுள் ளது.