districts

img

காலமுறை ஊதியம் வழங்கிடுக சத்துணவு ஊழியர்கள் சங்க நடைபயணத்திற்கு உற்சாக வரவேற்பு

சேலம், ஜூன் 7- காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒசூரிலிருந்து துவங்கிய தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினரின் நடைபயண பிரச்சார குழுவிற்கு சேலத்தில் உற்சாக வரவேற்பு அளிக் கப்பட்டது. தமிழக அரசின் சத்துணவு துறையில் பணியாற்றும் ஊழி யர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் திருச்சியை நோக்கி நடைபயணம் மேற்கொண்டுள்ளனர்.  ஜூன் 4 ஆம் தேதி முதல் ஜூன் 10 ஆம் தேதி வரை தமிழ கத்தின் 7 முனைகளிலிருந்து தமிழ்நாடு சத்துணவு ஊழியர்  சங்கத்தின் சார்பில் நடைபயண பிரச்சாரம் ஒசூரில் இருந்து  புறப்பட்ட குழு செவ்வாயன்று சேலம் வந்தடைந்தது. சங்கத் தின் மாநில துணைத்தலைவர் ஆர்.எம். மஞ்சுளா, மாநிலச் செயலாளர் க.மகேஸ்வரி தலைமையில் வந்த நடைபயணக் குழு ஓமலூர் வழியாக சேலம் புதிய பேருந்து நிலையம் வந்தடைந்தது. இந்த நடைபயண குழுவிற்கு பல்வேறு  அமைப்புகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் என்.திருவேரங்கன், சத்துணவு ஊழியர் சங்கத்தின் சேலம் மாவட்ட தலைவர் தங்கவேலன், மாவட்ட செயலாளர் ராஜ வேலு, பொருளாளர் அய்யாதுரை, மாநில செயற்குழு உறுப் பினர் அமராவதி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இதில், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சுரேஷ், மாவட்ட பொரு ளாளர் செல்வம், சி.முருகப்பெருமாள், கலைவாணன் அந் தோணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.