districts

img

மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்திடுக: சிபிஎம் ஆர்ப்பாட்டம்

கோவை, டிச.9- தேசிய நெடுஞ்சாலையில் மழை நீர் வடிகால் ஏற்படுத்தக் கோரி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்  கோவை குருடம்பாளையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  கோவை மாவட்டம், குருடம் பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தெருவிளக்குகள் முறை யாக பராமரிக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் வடிகால் வசதிகளை ஏற்படுத்த வேண்டும். தேசிய நெடுஞ்சாலையில் சென்டர் மீடியன் அமைத்திட வேண்டும். ஊராட்சிக்குட்பட்ட நீர் வழி தடங் களை தூர்வார வேண்டும். ராக்கி பாளையம் ஏகேஎஸ் நகரில், நாடளு மன்ற உறுப்பினர் தொகுதி மேம் பாட்டு நிதியில் இருந்து அமைக் கப்பட்ட நூலகத்தை முறையாக பரா மரித்து மின்வசதி ஏற்படுத்திட வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து ஆர்ப்பாட்டம் நடைபற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பெரிய நாயக்கன்பாளையம் ஒன்றியக்குழு உறுப்பினர் சண்முககனி தலைமை ஏற்றார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட் டச் செயலாளர் சி.பத்மநாபன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.கன கராஜ், ஒன்றியச் செயலாளர் மோகன் ராஜ் உள்ளிட்டோர் உரையாற்றினர். இதில் ஏராளமானோர் பங்கேற்ற னர்.