districts

img

பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் சுகாதாரமான குடிநீர் வசதி ஏற்படுத்திடுக

பொள்ளாச்சி, ஏப்.24- பொள்ளாச்சி பேருந்து நிலையத்தினுல், சுகாதாரமான குடிநீர் வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.  பொள்ளாச்சியை சுற்றி ஏராளமான கிரா மங்கள் உள்ளது. இதில், லட்சக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். மேலும், வால் பாறை, ஆழியாறு, டாப்சிலிப் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் இப்பகுதியில் உள்ளது.  பொள்ளாச்சியை சுற்றியுள்ள நூற்றுக்க ணக்கான கிராமங்கள் மற்றும் சுற்றுலாத் தலங் களுக்கு செல்வதற்கு பொள்ளாச்சியே மையப்பகுதியாக இருக்கிறது. இங்குள்ள பேருந்து நிலையத்தில் இருந்தே அனைத்து  பகுதிகளுக்கும் செல்ல முடியும். இவ்வ ளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த பொள் ளாச்சி பேருந்து நிலையம், சுகாதாரமற்ற நிலையிலேயே உள்ளது.  குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். கோவை - பழனி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் நிற்கக்கூடிய இடத்தில், குடிநீர் தொட்டி இருந்தும், அதில் தண்ணீர் வருவதில்லை. தண்ணீர் தொட்டியும் சுகாதாரமற்ற நிலை யிலேயே இருக்கிறது.  பொள்ளாச்சியை தனி மாவட்டமாக பிரிக்க வேண்டும் என்கிற கோரிக்கை தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது. தமிழக அரசும் இதற்கான ஆலோசனையில் ஈடு பட்டு வருவதாக தெரிகிறது. இந்நிலையில் மிக முக்கியத்துவம் வாய்ந்த பொள்ளாச்சி பேருந்து நிலையத்தை நவீனப்படுத்தி, அனைத்து அடிப்படை வசதிகளும் பொள் ளாச்சி நகராட்சி செய்து தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.