districts

img

பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டா

ஈரோடு, அக்.7- வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் சென்னிமலை ஒன்றி யத்தில் 647 பயனாளி களுக்கு ரூ.9.33 கோடி மதிப் பீட்டில் விலையில்லா வீட்டு மனைப் பட்டாக்களை அமைச்சர் சாமிநாதன் வழங் கினார். ஈரோடு மாவட்டம், சென்னிமலை, அம்மன் காட்டேஜ் வளாகத்தில் நடை பெற்ற நிகழ்ச்சிக்கு தமிழ்வளர்ச்சி மற்றும்  செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமி நாதன் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா முன்னிலை  வகித்தார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் 647 பய னாளிகளுக்கு ரூ.9.33 கோடி மதிப்பீட்டில் விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்களை அமைச்சர் வழங்கினார்.  இதில் பசுவபட்டி கிராம ஊராட்சியை  சார்ந்த 20 பயனாளிகள், எக்கட்டாம் பாளையம் ஊராட்சியைச் சார்ந்த 492 பேர்,  முருங்கத்தொழுவு ஊராட்சியை சார்நத 135  பயனாளிகள் அடங்குவர்.