திருப்பூர், டிச.17- திருப்பூர் நீர்நிலை புறம்போக்கில் குடி யிருப்பதாக கூறி 200க்கும் மேற்பட்ட குடும் பத்தினரை அவர்கள் வீடுகளில் இருந்து வெளியேற்ற நோட்டீஸ் வழங்கப்பட்டு வரு கிறது. ஆகவே, நில வகை மாற்றம் செய்து அந்த மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங் குமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு: திருப் பூர் செட்டிபாளையம் வருவாய் கிராமத் திற்கு உட்பட்ட அங்கேரிபாளையம், ஆத்துப் பாளையம், திருவள்ளுவர் நகர், அம்பேத் கர் நகர், அண்ணா நகர் உள்ளிட்ட இடங் களில் ஓடை புறம்போக்கு பகுதியில் 200 குடும்பங்கள் 15 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வருகின்றனர். இவர்களுக்கு மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, வீட்டு வரி உள்ளிட்ட அனைத்து சான்று ஆவ ணங்களும் இருந்தும், உடனடியாக காலி செய்ய வேண்டும் என பொதுப் பணி துறை யின் மூலம் அவர்கள் குடியிருக்கும் வீடு களில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. பல்லாண்டு காலமாக இப்பகுதியில் வசிக்கும் மக்கள் “எங்களுக்கு அடுக்கு மாடி குடியிருப்பில் பணம் கட்டி வீடு வேண் டாம்”. “பாதுகாப்பாக வாழ்வதற்கு பொருத் தமான இடம் தேர்வு செய்து இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும். அங்கேரி பாளையம் கிழக்கு வீதி (317 க ச என்) சாலை புறம்போக்கில் பல ஆண்டு காலமாக குடி யிருந்து வரும் பொது மக்களுக்கு வகை மாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும் என கோரி வருகின்றனர். இந்நிலையில், திருப்பூர் மாவட்ட ஆட்சி யரை நேரில் சந்தித்து மனு கொடுப்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலை மையில் வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அங்கு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவி யாளர் சாகுல்அமீது மனுக்களை பெற்றுக் கொண்டு, மாவட்ட ஆட்சியரின் கவனத் துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் கே.பழனிச்சாமி, முன்னாள் மாமன்ற உறுப்பினர் கே.மாரப்பன், கட்சி யின் ஒன்றிய குழு உறுப்பினர் ஏ.சந்தோஷ் மற்றும் ஆர்.என்.ரத்தினசாமி, கிளைச் செய லாளர் ஜெ.சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.