உதகை, ஜூலை 29- பந்தலூரில் வன விலங்குகளால் மக்கள் உயிரிழக்கும் அபாயத்திற்கு நிரந்திர தீர்வு ஏற்படுத்துமாறு வலி யுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டம், பந்தலூர் தாலுகா, சேரம்பாடி அருகே கோரஞ் சால், சப்பந்தோடு, சுங்கம், கண்ணம் பள்ளி உட்பட பல பகுதிகளில் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. கோரஞ்சால் சப்பந்தோடு பகுதியை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி சுனிதா (42). இவர்களுக்கு அஸ்வதி (20) என்ற மகள் உள்ளார். அஸ்வதி கூடலூரில் உள்ள அரசு கல்லூரியில் பி.காம் சி.ஏ., படித்து வருகிறார். கடந்த இரு நாட்களுக்கு முன்பு அஸ்வதி கல்லூரி செல்வதற்காக தனது தாயா ருடன் வீட்டில் இருந்து பேருந்து நிறுத்தத்துக்கு நடந்து சென்றார். அப்போது சாலையையொட்டிய மூங்கில் தோப்புக்குள் இருந்த காட்டு யானை ஒன்று குட்டியுடன் சாலையை கடக்க முயன்றது.
யானை வருவதை பார்த்ததும் 2 பேரும் அங்கிருந்து ஓட்டம் பிடித் தனர். யானை அவர்களை விடாது துரத்தி சென்றது. ஒரு கட்டத்தில் காட்டு யானை 2 பேரையும் துதிக்கை யால் பிடித்து தூக்கி வீசி தாக்கியது. இதில் 2 பேரும் பலத்த காயமடைந் தனர். அஸ்வதி, சுல்தான் பத்தேரி யில் சிகிச்சை பெற்று வருகிறார். சுனிதா சிகிச்சை பலனின்றி உயிரி ழந்தார். இந்நிலையில், பந்தலூரில் வன விலங்குகளால் மக்கள் உயிரிழக்கும் அபாயத்திற்கு நிரந்திர தீர்வு காண கோரி கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன்.ஜெயசீலன் தலைமையில், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கூடலூர் வனக்கோட்டத்தில், வன விலங்குகள் தாக்கி மக்கள் உயிரிழப்பது தொடர்ந்து வருகிறது. இதை தடுக்க வனத்துறையினர் எவ் வித நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த பிரச்சனைக்கு நிரந்தர காண வனத்துறை மற்றும் அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரி வித்தனர். போராட்டக்காரர்களிடம் வனத் துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் சமாதானம் பேசினர். உரிய நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என அதிகாரிகள் உறுதியளித் ததால் மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.