கோவை, டிச. 15- சேமிப்புத் தொகையை வழங்காமல் இழுத்தடித்து வருவதைக் கண்டித்து, ஓய்வு பெற்ற போக்குவரத் துக்கழக தொழிலாளர்கள் கூட்டுறவு கடன் சங்க அலு வலகத்தில் வெள்ளிக்கி ழமை உள்ளிருப்புப் போராட் டத்தில் ஈடுபட்டனர். அரசுப் போக்குவரத்துக் கழக கோவை கோட்டத்துக்குட்பட்ட தொழிலாளர்க ளுக்கான பணியாளர் கூட்டுறவு சிக்கனக் கடன் சங்கம், உப்பிலிபாளையம் அவிநாசி மேம்பாலத்தின் கீழ் பகுதி யில் செயல்பட்டு வருகிறது. இந்த கடன் சங்கத்தில் ஓட்டு நர், நடத்துநர் உள்ளிட்ட சுமார் 6 ஆயிரம் பேர் உறுப்பினர் களாக உள்ளனர். பணிக்காலத்தில் தங்களது ஊதி யத்தில் இருந்து குறிப்பிட்ட தொகையை சேமிக்கும் ஊழி யர்களுக்கு, அவர்கள் ஓய்வு பெற்ற பிறகோ அல்லது அவர் கள் விரும்பும்போதோ திரும்பப் பெற முடியும். இந்த நிலை யில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கூட்டுறவு கடன் சங்கத்தில் இருந்து சேமிப்புத் தொகையை திருப்பிக் கேட்கும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பணம் வழங்கப்படவில்லை. இதனையடுத்து, போக்குவரத்துக்கழகத்தில் இருந்து கூட்டுறவு சங்கப் பதிவாளர் அலுவலகத்துக்கு கடிதம் வழங்கினால் மட்டுமே பணத்தை விடுவிக்க முடியும் என்று கடன் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்படும் நிலையில், கடிதம் வழங்காமல் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தாமதித்து வருவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. இந்த நிலையில், பொள்ளாச்சி, திருப்பூர், கோவை பகுதிகளைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஊழியர்கள் உள்ளிட்ட 7 பேர் தங்களின் சேமிப் புத் தொகையை திருப்பிக் கேட்டு கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நண்பகல் முதல் குடும் பத்தினருடன் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து கடன் சங்கத்தின் செயலாட்சியர் ரமேஷ் கூறும்போது, ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய சேமிப் புத் தொகைக்கு நாங்கள் பொறுப்பு என்று போக்கு வரத்துக்கழகம் கடிதம் கொடுத்தால் மட்டுமே எங்களால் பணத்தை வழங்க முடியும். ஓரிரு நாள்களில் கடிதம் கொடுத்து விடுகிறோம் என்று போக்குவரத்துக்கழகம் தரப்பில் கூறி யுள்ளனர் என்றார். கூட்டுறவு சங்கங்களின் சிறப்பு அதிகாரி விரைவில் பிரச்ச னையை தீர்த்து கொடுப்பதாக சங்க செயலாளர் ரமேஷ் உத்தரவாதம் அளித்ததன் பேரில் உள்ளிருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.