districts

சந்தையை மாலை நேரத்திற்கு மாற்ற கோரி போராட்டம்

கோவை, ஆக.14- கோவை மாவட்டம், காரமடையில் விவ சாயிகள் விலை பொருட்களை விற்பனை  செய்யும் விவசாயிகள் மார்க்கெட் செயல் பட்டு வருகிறது. காரமடை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறிகள் மற்றும் இதர பொருட் களை விவசாயிகள் நேரடியாக விற்பனை செய்வதற்காக விவசாயிகள் மார்க்கெட் செயல்பட்டு வரும் நிலையில், கொரோனா காலகட்டத்தில் இந்த விவசாயிகள் மார்க்கெட் இரவு நேர மார்க்கெட்டாக மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது,  இந்த மார்க்கெட் இரவு 2 மணிக்கு மார்க்கெட் திறக்கப்பட்டு காலை வரை மார்க்கெட் செயல் படும் வகையில் தற்போது வரை இருந்து வரு கிறது.  இந்த மாற்றம் காரணமாக விவசாயிகள் இரவு நேரத்தில் காய்கறிகளை கொண்டு வரு வதில் சிரமம் ஏற்பட்டு வருவதாகவும், சாலை யில் காட்டு யானை, பன்றிகள் உள்ளிட்ட வன விலங்குகள் தொல்லை உள்ளதால், இதனை  மாலை நேரத்துக்கு மாற்ற வேண்டும் என பல முறை நகராட்சி நிர்வாகத்திடம் விவசாயிகள் மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரை நக ராட்சி நிர்வாகத்தின் தரப்பில் இருந்து அதற் கான எந்த அறிவிப்பும் வரவில்லை, இந்நிலை யில், திங்களன்று, விவசாயிகள் சங்கத்தினர்  காரமடை நகராட்சி கூட்ட அரங்கினை முற்று கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  முன்னதாக, நகராட்சி மன்ற கூட்டம் நடை பெற்றுக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த  விவசாயிகள் சுமார் 50க்கும் மேற்பட்டோர். நகராட்சி அலுவலகத்திற்குள் முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைய டுத்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளி டம் நகராட்சி தலைவர் உஷா மற்றும் ஆணை யாளர் அமுதா ஆகியோர் பேச்சுவார்த்தை  நடத்தினர். அப்போது விவசாயிகள் தரப்பில் வாரத்தில் மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மார்க்கெட்டினை மாலை 6மணிக்கு துவங்கி இரவு 10 மணிக்குள் முடியும் வகையில் மாற்றி யமைக்க வேண்டும். அப்போது தான் விவ சாயிகள் காலை முதல் அறுவடை செய்த காய் கறிகள் உள்ளிட்ட விளை பொருட்களை விற் பனை செய்ய முடியும் என வலியுறுத்தி னர். இதனையடுத்து, கோரிக்கை குறித்து  உயர் அதிகாரிகளிடம் பேசி விவசாயிக ளுக்கு சாதகமான முடிவு விரைவில் அறி விக்கப்படும் என பேச்சு வார்த்தையில் உறுதி அளித்ததைத்தொடர்ந்து விவசாயிகள் அங் கிருந்து கலைந்து சென்றனர்.