கோவை, டிச.8- கோவையில் வேளாண் கல்லூரி தேர்வு முறை கேட்டை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாண வர் சங்கத்தின் நிர்வாகிகள் ஏழு பேர் கைது செய்யப் பட்டதை கண்டித்து கோவை சிவானந்தா காலனி அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து கண்டன ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கேஎஸ் கனக ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத் தில் மாணவர் சங்க மாநில செயலாளர் வி. மாரியப்பன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் எ.ராதிகா சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் காவல்துறையின் அரா ஜக நடவடிக்கையைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பி னர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.